states

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைப்பு

கொல்கத்தா, ஜூலை 13 - மேற்குவங்க பஞ்சாயத்து தேர்த லில், திரிணாமுல் காங்கிரஸ் பெரு வாரியான இடங்களில் வெற்றிபெற்று ள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள  நிலையில், கொல்கத்தா உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் உட்பட ஒட்டு மொத்த பஞ்சாயத்து தேர்தல் செயல் முறையும் தங்களின் இறுதி உத்தர வுக்கு உட்பட்டது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. “பஞ்சாயத்து தேர்தலின் முழு  செயல்முறையையும் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கண்காணித்து வருகிறோம், அந்த வகையில் வாக்குப்  பதிவு, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் போன்ற எதுவாக இருந்தாலும், தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கு களில் நாங்கள் பிறப்பிக்கும் இறுதி உத்தரவுகளுக்கு உட்பட்டது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்” என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேற்குவங்க பஞ்சாயத்து தேர்த லின்போது, ஆளும் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியும், மாநிலத் தேர்தல் ஆணை யமும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, மிகப்பெரிய அளவிற்கு தேர்தல் முறைகேடுகளை அரங்கேற்றின.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில்

இந்நிலையில், மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலின் ஒட்டுமொத்த செயல்முறை தொடர்பாக சுதந்திர மான அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும்; சுமார் 6 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும்; கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தர விட்டும், தேர்தலின் போது உரிய பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறிய மேற்குவங்க மாநில தேர்தல் ஆணை யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத் தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. “இந்த நீதிமன்றம் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக தேர்தல் நடைமுறை இருந் தது. பலாத்காரம், கொலை மற்றும் கொடூரமான குற்றச் சம்பவங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வை க்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சீட்டுகள் சூறை யாடப்பட்டன, சாவடிகள் கைப்பற்றப் பட்டன. கள்ளவாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை ஆகும்.  வாக்குப்பெட்டியில் சிறுநீர்  கழிக்கும் ஒருவரின் புகைப்படம் ஜன நாயக விழாவை கேலிக்கூத்தாக மாற்றி விட்டது. வாக்குச் சாவடிகளில் காவல்துறை அதிகாரிகள் இருந்த போதிலும் கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவ டிக்குள்ளேயே வன்முறை நடத்தப் பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை யிலும் தில்லு - முல்லு நடந்துள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து, பெண் வேட்பாளர்கள் முடியை இழுத்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  தற்போது தேர்தல் முடிவுகள் வெளி யாகியுள்ள நிலையில், தோல்வி யடைந்த வேட்பாளர்களை ஊருக்குள் நுழைய விடக்கூடாது என்று மிரட்டல் விடுக்கும் கலாச்சாரம் ஆளும் கட்சி யினரால் உருவாக்கப்பட்டு வரு கிறது. தோல்வியடைந்த வேட்பாளரின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நட த்தப்பட்டுள்ளது” என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி  டி.எஸ். சிவஞானம் மற்றும் நீதிபதி  ஹிரண்மாய் பட்டாச்சார்யா ஆகியோர்  அடங்கிய கொல்கத்தா உயர்நீதிமன்றத் தின் 2 நீதிபதிகள் அமர்வில் புதனன்று மதியம் விசாரணைக்கு வந்தது. மத்தியப் பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைப்பாளர் சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் (DSG) பில்வடல் பட்டாச்சார்யா, ஆஜராகி வாதாடினார். அவர், “பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர் பாக நாங்கள் விரிவான அறிக்கை யைத் தயாரித்து அதைச் சமர்ப்பிப் போம். ஆனால், இதுநாள் வரை, பதற்ற த்திற்குரிய முக்கியமான சாவடிகள் பற்றிய எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை. மத்தியப் பாதுகாப்புப் படை யினரை எவ்வாறு பணியமர்த்துவது என்பதற்கான திட்டம் எங்களுக்கு வழ ங்கப்படவில்லை” எனக் கூறினார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரேவால் உள்ளிட்டோரும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைத்தனர்.

முடிவுகள் நிறுத்தி வைப்பு

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தேர்தல் முடிவுகள் வெளி யான பிறகும், வன்முறையைக் கட்டுப் படுத்த முடியவில்லை என்று அரசு குறிப்பிடுவது ஆச்சரியமாகஇருக் கிறது” என்று தெரிவித்ததுடன், “குடி மக்களின் சுதந்திரம் எவ்வாறு சமரசம் செய்யப்படுகிறது என்பது குறித்தும், குடிமக்களுக்கு காவல்துறை உத விக்கரம் நீட்டவில்லை என்பது குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு மாநில அரசிடம்தான் உள்ளது. மாறாக, குடிமக்களைப் பாதுகாக்கும் நிலையில் அது இல்லை என்றால், அது மிகவும் தீவிரமான விஷயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.  மேலும், இந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம், மற்றும் மாநில - ஒன்றிய அரசுகள் தங்களின் பதில்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 21க்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கில், மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் என அனைத்து தேர்தல் செயல்முறையும் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும் என்று கூறிய நீதிபதிகள், அதுவரை வாக்குப்பதிவு மற்றும் எண்ணும் சாவடிகளின் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்குப்பெட்டிகள் மற்றும் ஆவணப் பதிவுகளை பராமரிக்க வேண்டும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.