சென்னை, ஜன.13- கடந்த பத்தாண்டுகளில் தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்திருக்கிறோம் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது: முதலமைச்சர் செயல்படுகிறார்; அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்; தலைமைச் செயலகம் செயல்படுகிறது என்பதாக இல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ்நாடே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. கடந்த பத்து ஆண்டு களாகத் தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்திருக்கிறோம். தேய்ந்து கிடந்த தமிழ்நாட்டை வளப் படுத்தி வருகிறோம். கடந்த பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்புகள் 2.20 லட்சம் மட்டுமே. ஆனால், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு 15 மாத காலத்தில் வழங்கிய இணைப்புகள் 1 லட்சத்து 50 ஆயிரம். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல; படிக்கவராமல் இடையில் நின்று விடக் கூடியவர்களையும் பள்ளி, கல்லூரி களுக்குள் அழைத்து வருகிறோம். அதிமுக கடன் வலையில் சிக்க வைத்துச் சென்றதை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வருகிறோம். நிகரக் கடனை குறைத்திருக்கிறோம். இந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் என்ன செய்கிறது என்று எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி கேள்வி எழுப்பினார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் திருபுகழ், பூர்ணலிங்கம், நீதிபதிகள் ஏ.கே.ராஜன், கே. சந்துரு உள்ளிட்டோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அதன்பணியை சிறப்பாக செய்துள்ளது. அந்த குழுக்களின் பரிந்துரைகளை ஏற்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் தான் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமது அரசின் சாதனைகளை வாசித்துக் காட்டினார் முதல மைச்சர்.