சென்னை,ஜூன் 22- அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்து உள்ள நிலையில், ஓ.பனீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவு கிறது. இந்த நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வானகரத்தில் திட்ட மிட்டபடி நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல் வம் தனது டிவிட்டர் பக்கத்தில் “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம், “பொதுக்குழுவில் தீர்மான திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட பின்பே அதுகுறித்து தேர்தல் ஆணை யத்தில் முறையிடுவோம். இப்போ தைக்கு செல்ல மாட்டோம். உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு செல் வோம். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறினார்.