காரகஸ், செப்.1- உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டு மானாலும் கச்சா எண்ணெய்யை விற்க வெனிசுலா தயாராக இருக்கிறது என்று வெனிசுலாவின் பெட்ரோலியத்துறை அமைச்சர் தாரெக் எல் அய்சாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் பல ஐரோப்பிய நாடுகள் வேறு வழியின்றி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன. இதனால் அந்த நாடுகளில் கடுமையான விலை வாசி ஏற்றம் இருக்கிறது. அதைச் சமாளிக்க முடியாமல் திணறும் நாடு களில் ஒன்றான செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் உசிச், “எண்ணெய் விநியோகத்தில் பெரும் நெருக்கடி ஏற் பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கையால் மேற்கத்திய நாடுகள் தடைகளைப் போட்டுள்ளன. எனவே, எண்ணெய் வாங்குவதற்கான மாற்று வழியை யோசிக்க வேண்டும்.
அந்த மாற்று வழிகளில் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதும் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டார். இதுகுறித்து ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெனிசுலாவின் பெட்ரோலி யத்துறை அமைச்சர் தாரெக் எல் அய்சாமி யிடம் கேட்டபோது, “அது செர்பிய அரசாக இருந்தாலும் சரி, அமெரிக்க அரசாக இருந்தாலும் சரி அல்லது உலகின் எப்பகுதியில் உள்ள அரசாக இருந்தாலும் சரி. நாங்கள் எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எங்கள் அரசு நிறு வனத்தின் மீது அமெரிக்கா போட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டால், பல நாடுகளின் துயரங்கள் நீங்கும்” என்றார். ஆனால், 2017-ஆம் ஆண்டு போடப்பட்ட தடைகளை மீறி ஒரு நாளைக்கு 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை வெனிசுலாவால் எடுக்க முடியும் என்று ஆகஸ்டு மாதத்தில் வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ குறிப்பிட்டிருந்தார்.