states

img

துண்டிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி

தூத்துக்குடி,டிச.19-  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத் தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலை யில், மூன்று நாட்கள் ஆகியும் தூத்துக்குடி மாநகரமும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான் குளம் உள்பட தூத்துக்குடி மாவட்ட த்தின் கணிசமான பகுதிகள் தொடர்பு வட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. 

திருநெல்வேலி மாவட்ட அணைகளி லிருந்து தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால்  குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து மூழ்கின. தூத்துக்குடியில் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், குடியிருப்பு  பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.  சாலைகளில் மழைவெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள்  நிரம்பி வழிகின்றன. இவற்றி லிருந்து வெளியேறிய உபரிநீர் மற்றும் சில நீர்நிலைகளின் கரைகள் உடைந்தும் ஊருக்குள் தண்ணீர் பாய்ந்தது. இதனால்  பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.நள்ளிரவில் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தூத்துக்குடி அனல்மின்நிலைய பணியாளர்கள் குடி யிருப்புக்குள் மழைவெள்ளம் புகுந்தது. இங்கிருந்தவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு,முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். 

ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து சாலை களும் மழைவெள்ளத்தால் மூழ்கியுள்ளன. ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை.மூன்றாவது நாளாக செவ்வாயன்றும் தூத்துக்குடி வெள்ளத்தில் மிதக்கிறது.

ஹெலிகாப்டர்கள் தேவை
நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் படகுகள் மூலமாக கூட மக்களை மீட்க முடியவில்லை. எனவே கடற்படையின் ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்டி ருக்கிறது. ஆனால் தற்போது ஒன்றிரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் உள்ளன. இது போதுமானதாக இல்லையென பொது மக்கள் கூறியுள்ளனர். கூடுதல் ஹெலி காப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்  சிங்குக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி யுள்ளார். 

40 லட்சம் பேர் பாதிப்பு
ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பைக்குகள்,  கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்து ள்ளன. மீட்கப்பட்ட மக்கள்  திருமண மண்டபங்களிலும், அரசு கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
இந்நிலையில் தூத்துக்குடி, திரு நெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறி விக்கப்பட்டிருக்கிறது. வெள்ள நீர் வடியாத நிலையில் பல பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு நிவாரண முகாம் களாக செயல்பட்டு வருவதால் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன.

ரயில் பயணிகளை மீட்க விரிவான ஏற்பாடுகள்
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் சரளை கற்களை வெள்ள நீர் அடித்துச் சென்றுள்ளது. எனவே  ரயில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

தாழையூத்து - கங்கைகொண்டான் ரயில் பிரிவில் 7.71 கி.மீ. ரயில் பாதை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணரிப்பு மற்றும் சரளை கற்கள் முழுவதுமாக அடித்துச்செல்லப்பட்டுள்ளது. 

நைனார் குளம் நிரம்பி வழிவதால் திருநெல்வேலி ரயில் நிலையம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

அதிக மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதைக்கு மேல்  ஒரு மீட்டர் அளவிற்கு வெள்ள நீர் தேங்கி யுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை - மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே  7.47 கி.மீ தூர ரயில் பாதையில் உள்ள 9 நீர்வழிப் பாலங்களில் அபாயகர அளவில் வெள்ளநீர் சென்று கொண்டிருக் கிறது.

 திருநெல்வேலி அருகே உள்ள செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில்  நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூர த்திற்கு பாதையில் சரளை கற்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

மழை நின்று வெள்ள நீர் குறைந்தவுடன் சீரமைப்பு பணிகள் துவங்க இருக்கிறது. இதற்காக ரயில்வே பொறியியல் பிரிவு தேவையான ஊழியர்கள் மற்றும் உபகர ணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. 

செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் மீட்பு
ஸ்ரீவைகுண்டம் - செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் திடீர்  பாதிப்பு ஏற்பட்ட தால் டிசம்பர் 17 அன்று இரவு 08.25 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் 33 கிமீ பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரவு 09.19 மணிக்கு நிறுத்தப்பட்டது. இந்த  ரயிலில் சுமார் 800 பயணிகள் பய ணித்துக் கொண்டிருந்தனர். மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் டிசம்பர் 18 அன்று 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அழைத்துச் சென்று அருகில் உள்ள பள்ளியில் பாது காப்பாக தங்க வைக்கப்பட்டனர்.  

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தற்போது தண்ணீர் வடிந்ததால், ரயில் நிலையத்தில் இருந்த மீதமுள்ள  பயணிகள் உடைமைகளுடன் தண்டவாளம் வழியே நடந்து வெளியேறினர். கர்ப்பிணி பெண், குழந்தை உட்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம்
பேரிடர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டனர். 
மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உதவியுடன் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. 

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணியை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் எ.வ.வேலு,உதயநிதி,  கீதா  ஜீவன் உட்பட பல அமைச்சர்கள் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்தித்து, மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.