states

img

செப்.26 முதல் காத்திருப்புப் போராட்டம்: போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு

சென்னை, செப். 16 - அகவிலைப்படி உயர்வை கேட்டு செப்.26ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடை பெறும் என்று தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் பொதுச்  செயலாளர் கே.கர்சன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஓய்வூதியர்க ளுக்கு 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. 95 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், மருத்துவப் படியை  300 ரூபாயாக உயரத்தி தர  வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூ தியமாக 7ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், 2019 ஏப்ரல் - ஆகஸ்ட்  மற்றும் 2022  டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஓய்வு  பெற்றவர்களுக்கும்  வழங்கப்படா மல் உள்ள ஓய்வுக் காலப் பலன்களை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சனிக்கிழமை யன்று (செப். 16) பல்லவன் இல்லம்  முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு விரைவு போக்குவரத்து  கழகம், மாநகர போக்குவரத்து கழ கம் (சென்னை) ஓய்வு பெற்றோர்  கிளைகள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட பேசிய கே.கர்சன், “ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொண்டதை கூட அரசு செயல் படுத்த மறுக்கிறது. எனவே, செப்.26 ஆம் தேதி முதல் 8 கோட்ட தலைமை அலுவலகங்கள் முன்பும் காத்திருப்பு போராட்டம் தொடங்கும்” என்றார். சென்னை கிளைத் தலைவர் டி.குருசாமி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஏ.ரைமண்ட், துணைப்  பொதுச்செயலாளர் கே.வீரராக வன், விரைவு போக்குவரத்து கிளை  தலைவர் நடராஜன் உள்ளிட் டோர் பேசினர்.