states

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலை, ஜூன் 13- திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு பக்தர்களை அனுப்பி வருகிறது.  இந்நிலையில், திங்களன்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தர்ம தரிசனத்திற்கு 4 கி.மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று, சுவாமி தரிசனத்து சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விஐபி தரிசனம் மற்றும் வாராந்திர சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.