states

பீடி சுற்றும் தொழிலாளருக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம்

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை, மே 11-  பீடி சுற்றும் தொழிலாளருக் கான ஊதிய உயர்வு மூன்று ஆண்டு ஒப்பந்தம் முத்தரப்பு பேச்சுவார்த் தையில் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் உடன் பாடு எட்டப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐ டியு) பொதுச்செயலாளர் கே.திருச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் சென்னை, திரு வள்ளூர், வேலூர், திருவண்ணா மலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, தூத்  துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பீடித்தொழிலில் ஈடு பட்டுள்ளனர். இந்த தொழிலாளருக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 10.8.2015 ஆம் ஆண்டு ஏற்பட்டு ரூ.12 ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இந்த ஒப்  பந்தமானது 14.05.2019 ஆம் ஆண்டு டன் காலாவதியாகிவிட்ட நிலை யில் புதிய ஊதிய உயர்வு கோரிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு  கடந்த மூன்று ஆண்டு காலமாக  நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. தொழிலாளர் ஆணையர் அலு வலகத்தில் மே 10 அன்று நடை பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை யில் ஆயிரம் பீடிக்கு ரூ.13 ஊதி யத்தில் உயர்வு அளிக்க டிரேட்  மார்க் முதலாளிகள் சம்மதம் தெரி வித்ததை தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டு தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலை யில் 12(3) ஒப்பந்தம் உடன்பாடு ஏற்  பட்டது.

இந்த ஊதிய உயர்வின் அடிப்படையில் ஆயிரம் பீடி சுற்று வதற்கு அடிப்படை ஊதியம் ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. இதனுடன் பஞ்சப்படி ரூ.128ம் சேர்த்து ஆயி ரம் பீடிக்கு ஊதியம் ரூ.248 ஆக உயர்கிறது. இந்த ஒப்பந்தத்தம் 10.5.2022 முதல் 9.5.2025 வரை 3 ஆண்டு களுக்கு அமலில் இருக்கும். முந் தைய ஒப்பந்தம் முடிந்த காலமான 15.5.2019 முதல் 9.5.2022 வரை உள்ள காலத்திற்கு முந்தைய ஒப் பந்தத்தில் உள்ள ஷரத்துகளே பொருந்தும் எனவும், பஞ்சப்படி உயர்வு, வாரவிடுமுறை சம்பளம்  உள்ளிட்ட இதர கோரிக்கைகள் மீது தொழிலாளர் துறையினர் முன்பு பேசி தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சிஐ டியு தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளன தலைவர் எம்.பி.ராமச் சந்திரன், பொதுச்செயலாளர் கே. திருச்செல்வன், பொருளாளர் எஸ். பாப்பூ, துணை பொதுச் செயலா ளர்கள் வி.நாகேந்திரன், எம்.வேல்  முருகன் உள்ளிட்ட சம்மேளன நிர் வாகிகள் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நீண்டகால பேச்சுவார்த்தை யை முடிவுக்கு கொண்டு வர முன் முயற்சி எடுத்த தொழிலாளர் தனி இணை ஆணையர், துணை ஆணையர் (திருநெல்வேலி), உதவி ஆணையர் (வேலூர்) மற்  றும் கூடுதல் ஆணையர் ஆகி யோருக்கும், டிரேட் மார்க் பீடி கம்  பெனி நிர்வாகங்களுக்கும், இதர தொழிற்சங்கங்களுக்கும் தமிழ்  நாடு பீடித்தொழிலாளர் சம்மேள னம் (சிஐடியு) சார்பில் வாழ்த்து களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.