திருவனந்தபுரம், ஏப்.22- நாடு எதிர்நோக்கும் முக்கியமான பிரச்ச னைகளை எழுப்பி பிரதமரிடம் 100 கேள்விகள் கேட்ட வாலிபர் சங்கத்தை ,பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் அவமதிக்கப் பார்க்கி றார் என்றும் மகனைப் பயன்படுத்தி கருப்புப் பணம் கடத்திய, லஞ்சப்பணத்தில் மகனுக்கு ஒன்றிய அரசில் வேலை வாங்கிய சுரேந்திர னுக்கு வாலிபர் சங்கப் போராட்டம் குறித்து பேச தகுதி இல்லை எனவும் டிஒய்எப்ஐ மாநிலச் செயலாளர் வி.கே.சனோஜ் தெரிவித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலை மையில் கேரளாவில் உள்ள மருத்துவ மனைகளில் ‘இதயபூர்வம்’ என்னும் உணவு வழங்கும் திட்டத்தை உணவுப் போட்டி என்று இழிவுபடுத்தினார் சுரேந்திரன். அதற்கு பதிலளித்த சனோஜ், சாதி, மதம், அரசியல் வேறுபாடின்றி லட்சக்கணக்கான சாதாரண நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிஒய்எப்ஐ வழங்குவது ஒரு நிவாரணம். கே சுரேந்திரனின் அவமதிப்பு இந்த சாமானிய மக்களுக்கு சவாலாக உள்ளது. பா.ஜ.க. நாட்டு மக்களின் உணவை நிறுத்தி, உலக பட்டினி குறியீட்டில் 107ஆவது இடத்திற்கு கொண்டு வந்தது. ஆனால் வாலிபர் சங்கம் மக்களுக்கு உணவு விநியோகம் செய்கிறது. கேரளாவுக்கு பிரதமர் வரும்போது, இந்தியாவில் நிலவும் கடுமையான வேலை யில்லா திண்டாட்டம், ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்பாதது, திருவனந்தபுரம் விமான நிலைய விற்பனை, விதிமீறல் உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப யுவமோர் ச்சாவுக்கு கே.சுரேந்திரன் ஆலோசனை வழங்க உள்ளார். கே.சுரேந்திரனின் இழிவு ரைகளை கேரள பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் வி.கே.சனோஜ் தெரிவித்துள்ளார்.