திருநெல்வேலி, ஜூலை 9- நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே உள்ள அடைமிதிப் பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயி ரிழந்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 55 குவாரிகளை யும் முழுமையாக ஆய்வு செய்து விதி மீறல்களை கண்டறியுமாறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிறப்பு குழுக் கள் ஆய்வு செய்து அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 55 கல் குவாரிகளில் 54 கல்குவா ரிகளில் விதி மீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு குவாரி உரிமம் பெற்றும் இன் னும் தொடங்கப்படாததால் அதில் எந்த விதமான விதிமீறல்களும் இல்லை.இதில் 13 கல்குவாரிகளுக்கு ஏன் குவாரி களை மூடக்கூடாது என விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தரப்பில் இருந்து குவாரி உரிமையா ளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும் விதிகளை மீறி அனு மதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக 41 கல்குவாரிகளுக்கு சுமார் ரூ.300 கோடி வரை அபராதம் விதித்து கனிம வள துறையினர் நடவடிக்கை எடுத் துள்ளனர். அந்த அபராத தொகையை வசூலிக்க அந்தந்த சரக சப்-கலெக்டர் களுக்கு கனிமவளத்துறை பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வந்த அனைத்து குவாரிகளிலும் விதி மீறல் கள் நடந்ததுள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத் தில் அபராதம் விதிக்கப்பட்ட குவாரி கள் அபராத தொகையை கனிம வளத் துறையில் செலுத்தினால் மீண்டும் குவாரிகள் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.