states

பிஸ்கட் திருடியதாக 4 சிறுவர்களை கட்டிவைத்து தாக்கிய கிராமம்

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ளது பசில்பூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு பலசரக்கு பெட்டிக் கடை யில் பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டு களை திருடியதாக கூறி 4 இளம் சிறு வர்களை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து ஒட்டுமொத்த கிராம மக்களே கொடூர மாக தாக்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்த விர்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்ததால் 4 சிறுவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். போலீசார் சிறிது நேரம் தாமதமாக வந்து இருந்தால் சிறுவர்களின் உயிரே பறி போயிருக்கும். அந்தளவுக்கு கிராம மக்கள் ஒன்றுகூடி கொடூரமாக தாக்கி யுள்ளனர். 4 சிறுவர்களையும் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி த்துள்ள போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.