states

விஜயலட்சுமி புகார் எதிரொலி: சீமானுக்கு காவல்துறை சம்மன்

சென்னை, செப்.9- நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் எதிரொலியாக, வள சரவாக்கம் மகளிர் காவல்துறையி னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமானுக்கு நேரில்  ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி யுள்ளனர். இதற்கு 12 ஆம் தேதி நேரில் ஆஜராகுவதாக சீமான் பதில் அளித்துள்ளார்.  திரைப்பட இயக்குநரும், நாம்  தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளருமான சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது இருவரும் திருமணம் செய்வதாகக் கூறி ஒன்றாக வசித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் முன்னாள் சட்டப்பேரவை தலை வர் காளிமுத்துவின் மகளை திருமணம் செய்து கொண்டார். இதனால் கடந்த 11 ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்வதாகக் கூறி சீமான் ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் நடிகை விஜய லட்சுமி புகார் அளித்து வந்தார். கடைசியாக அதிமுக ஆட்சிக் காலத்தில் நடிகை விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்தார். இந்தப் புகார் மீது வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தும்படி உத்தர விடப்பட்டது.  அதைத் தொடர்ந்து சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் இந்த வழக்கில் எந்த மேல் நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீமான் மீது மீண்டும் நடிகை  விஜயலட்சுமி புகார் செய்தார்.  இந்தப் புகார் மீது காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.  இந்த விசாரணையை தொடர்ந்து, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். ஏற்கனவே இயக்குநர் சீமான் 7 முறை கருக்கலைப்பு செய் ததாக விஜயலட்சுமி கூறியிருந்தார்.  இந்த வாக்குமூலத்தின் அடிப் படையில், இயக்குநர் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சீமானுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ஏற்றுக் கொண்ட சீமான், வருகிற 12 ஆம்  தேதி (செவ்வாய்க்கிழமை) ஆஜரா வதாக பதில் அளித்துள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விஜயலட்சுமியுடன் பழகியதோடு அவரது கருக்கலைப் புக்கு அவர் காரணம் என்று தெரியவந்தாலோ, திருமணம் செய்து ஏமாற்றியது  தெரியவந் தாலோ,   அவர் கைது செய்யப்பட லாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.