பிரபல சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான பாலி நாரிமன் (95), வயது மூப்பு காரணமாக புத னன்று அதிகாலை 12.45 மணி அளவில் தில்லியில் கால மானார். 1950இல்மும்பை (பம்பாய்) உயர்நீதி மன்றத்தில் வழக்கறி ஞர் பணியை தொடங்கிய பாலி நாரி மன் 1972இல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனர லாக நியமிக்கப்பட்டார். 1975 இல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட் டதை எதிர்த்து தனது சொலிசிட்டர் ஜென ரல் பதவியை அவர் ராஜினாமா செய்து சாதாரண வழக்கறிஞர் பணியையே மீண்டும் தொடங்கினார். போபால் விஷவாயு விபத்து வழக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல் வேறு முக்கிய வழக்குகளில் வாதாடிய வர் பாலி நாரிமன். அவருக்கு பத்ம பூஷன், பத்மவிபூஷன் விருதுகள் வழங் கப்பட்டன. 1999-இல் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட் டார். பாலி நாரிமனின் மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.