states

img

வேளாண்மை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளனவாம்

புதுதில்லி, ஆக.9- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகி றது. கேள்வி நேரத் தின்போது, பி.ஆர். நடராஜன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உண்மையா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், மேலும் கடந்த பத்து வருடங்களில், வேளாண்மை மற்றும் தொழில்துறைக்கு வழங்கப்பட்ட நன்மைகள் மற்றும் அது பற்றி எடுக்கப் பட்ட முடிவுகளின் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய வேளாண்மை நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறிய தாவது: வேளாண் துறை - “மாநில பொருள்” என்பதால், மாநில அரசுகள் வேளாண் துறை வளர்ச்சிக்கென தங்கள் மாநிலங்க ளில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றன. எனினும் பல்வேறு திட்டங்கள், பட்ஜெட் ஆதரவு மற்றும் பொருத்தமான கொள்கை நடவடிக்கைகள் மூலம், இந்திய அரசு மாநிலங்களின் முயற்சிகளுக்கு துணை செய்கிறது.

உற்பத்தி அதிகரிப்பு, ஊதிய வருமானம் மற்றும் விவசாயிகளுக்கு வருமான ஆதரவு ஆகியவற்றை செய்வதன் மூலம் இந்திய அரசின் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கானவைகளாக உள்ளன. வேளாண்துறை வளர்ச்சி மற்றும் விவ சாயிகளின் நலன்களுக்காக, அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னெ டுப்புகள் மற்றும் திட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:   பிரதமர் கிசான் திட்டம் மூலம் விவசாயி களுக்கு வருமான ஆதரவு,  பிரதமர் ஃபாசல் பீமா யோஜனா,  வேளாண்துறைக்கு நிறுவனக்கடன்,  உற்பத்திச்செலவில் ஒன்றரை மடங்கு வீதத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்,  நாட்டில் இயற்கை விவசாயத்தை உயர்த்துதல்,  ஒரு சொட்டில் அதிக பயிர் (One drop more crop),  நுண்ணீர் பாசன நிதி,  விவசாயி - உற்பத்தியாளர் அமைப்பை உயர்த்துதல்,  தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் பணி, வேளாண்மையை இயந்திரமயமாக்கல், விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டை கள் வழங்குதல், தேசிய வேளாண் சந்தை  (e - NAM)க்கு விரிவான தளம் அமைத்தல், உண்ணக்கூடிய எண்ணெய் வகைகள் - பனை எண்ணெய் தேசியப்பணி துவக்கம்,  விவசாயக் கட்டமைப்பு நிதி, பண்ணை விளைபொருட்கள் போக்குவரத்து முன்னேற்றம், கிசான் ரயில் அறிமுகம், க்ளஸ்டர் முன்னேற்றத் திட்டம், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் துவக்கநிலை சுற்றுச்சூழல் அமைப்பு உரு வாக்கம், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் சாதனை. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள் ளார். (ந.நி.)