states

“வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” திட்டம்: ரூ.20 கோடியில் தொடக்கம்

சென்னை,ஜன.16- தெருவில் சுற்றித்திரியும் பிராணி கள் பராமரிப்புக்கு ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கால்நடைகள், வளர்ப்பு பிராணி கள் உயிர் வாழ்வதற்கு அவற்றின் உரிமையாளர்களை சார்ந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்க ளால் உரிமையாளர்களால் கைவிடப் பட்ட விலங்குகள் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தங்குமிடம் தேடி அலையும் போது, உடலில் காயங்கள் மற்றும் பாது காப்பற்ற, கெட்டுப்போன உணவை  உட்கொள்ளும்போது தொற்று நோய்கள் போன்ற பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுக்கு உட்படு கின்றன.

இதுபோன்று கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில், தமிழக அரசின் 2022-2023 ஆம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக்கையில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவி யளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப் படும். காயமடைந்த மற்றும் நோய்வாய்ப் பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை  அளிக்கப்படுவதை உறுதி செய்வதற் காக பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், விலங்குகள் நல அமைப்புகள் பிராணி கள் நலன் தொடர்பான அரசு சாரா  தொண்டு நிறுவனங்களுக்கு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளிக்கப்படும்.