states

மலிவான அரசியலுக்காக தேசிய திரைப்பட விருதுகளை பயன்படுத்துவதா?

சென்னை, ஆக. 25- மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், நாட்டின் 69ஆவது தேசிய விருதுகளில், தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசி விவசாயி படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள முதலமைச்சர், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக் காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஷ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த கல்வித் திரைப்படத்துக் கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக் கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக வும் குறிப்பிட்டுள்ளார். இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்பு தன்மை இல்லாமல் இருப்பது தான் அந்த  விருதுகளைக் காலம் கடந்தும் பெருமைக் குரியவையாக உயர்த்திப் பிடிக்கும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக் கப்படக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.