states

போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பிற மாநிலத்தவர்

சென்னை, ஏப்.13- போலிச் சான்றிதழ் மூலம் தபால் துறையில் பணியில் சேர்ந்த பிற மாநிலத்தவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தபால்  துறைக்கான போட்டித் தேர்வில் தமி ழகத்தில் உள்ள தபால் நிலையங் களில் பணியில் சேர்ந்த பிற மாநி லத்தவர்கள் நூற்றுக் கணக்கானோர் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை வழங்கியுள்ளனர். 

இந்த சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்த போது இந்தி மொழி முதன்மை பாட மாக சான்றிதழில் இருந்துள்ளது. இதனையடுத்து அரசு தேர்வுத்துறை, சான்றிதழ்களை முழுமையாக சரி பார்த்தபோது, பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக வழங்கிய சான்றிதழ்கள் போலியானவை என உறுதி செய்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசின் முத்திரை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் பெயர் ஆகிய வற்றை தவறாக பயன்படுத்தி போலி  சான்றிதழ்களை தயார் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒன்றிய அரசு மற்றும் அரசுதுறை களில் மேற்கொள்ளப்படும் பணி நிய மனங்களில் தமிழகத்தைச் சார்ந்த வர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தமிழ கத்தில் படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது, படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தி யில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. தமிழக அரசாங்கம் உடனடியாக போலி சான்றிதழ்கள் மூலமாக தபால் துறையில் பணியில் சேர்ந்த பிற மாநிலத்தவரை கைது செய்வதோடு இப்பிரச்சனை குறித்து  முழுமையான விசாரணை நடத்தி  போலி சான்றிதழ்களுக்கு பின்னணி யாக உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களாக ஒன்றிய அரசின் பணியிடங் களில் சேர்ந்த பிற மாநிலத்தவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு முழுமை யாக சான்றிதழ்களை சரிபார்த்திட தமிழக அரசாங்கம் விசாரணைக் குழு அமைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.