தூத்துக்குடி, ஏப். 27- மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாமிரபரணி பாது காப்பு இயக்கத்தினர் சார்பாக மனு அளிக்க வந்தனர் .அப்போது செய்தியா ளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் அய்கோ கூறுகையில், தூத்துக்குடி, முறப்பநாடு, கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை மணல் கொள்ளையர்கள் செவ்வா யன்று பட்டப்பகலில் அலுவலகம் புகுந்து வெட்டிக் கொன்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே முறப்பநாடு காவல்துறையினர் உதவியுடன் கலியா வூர், அனந்தநம்பிக்குறிச்சி, மணக் கரை, ஆழிகுடி, செந்நெல்பட்டி, மரு தூர் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் கொள்ளை நடந்து வந்தது. இதற்கு முன்பு முறப்பநாட்டில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் சுரேஷ் குமாரும், தற்போது உதவி ஆய்வாளராக இருக்கும் அந்தோணி ராஜும் கையூட்டு பெற்றுக்கொண்டு மணல் கடத்தலை ஊக்குவித்துள்ள னர். அதுமட்டுமல்ல, சிறப்புப் பிரிவு காவல்துறையினரும் மணல் கொள்ளையில் லஞ்சம் பெற்றுள்ளனர்
சுதந்திரமாக திரிந்த ராமசுப்பிரமணியன்
கடந்த 13.4.2023 இல் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் புகாரின்பேரில் ராமசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவரை கைது செய்யாமல் சுதந்திர மாக விட்டுள்ளனர். அதற்காக காவல்துறையினருக்கு ரூ.35,000 லஞ்சம் கொடுக்கப்பட்டுள் ளது. சம்பவத்தன்று காலையில் கூட ராமசுப்பிரமணியன் காவல் நிலை யத்துக்கே சென்று பேசியுள்ளார். அவரை கைது செய்யவில்லை, மாறாக, கிராம நிர்வாக அலுவலர் உன்னை கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார் என்று லூர்து பிரான்சிசை காட்டிக்கொடுத்து அவர் மீது பழியை போட்டுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பிர மணியன், கிராம நிர்வாக அலுவலகம் சென்று அலுவலரை வெட்டிக் கொன்றுள்ளார். இவையனைத்தும் முறப்பநாடு காவல்துறையினருக்கும் சிறப்புப் பிரிவுக்கும் தெரியும். முன்னெச்ச ரிக்கையாக அவரை கைது செய்தி ருந்தால் இந்தக் கொலையை தடுத்தி ருக்க முடியும். அதுமட்டுமின்றி, கொலை நடந்த கிராம நிர்வாக அலு வலகம் காவல் நிலையத்திலிருந்து நேரெதிரே சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. காவல் நிலையம் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்று சாவதானமாக கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக் கொன்றுள்ளனர். எனவே, கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஜமால், துணை ஆய்வாளர் அந்தோணிராஜ். சிறப்பு பிரிவு ஏட்டு மகாலிங்கம் ஆகி யோரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கைபேசிகளை கைப்பற்றி, அழைப்பு விவரங்களை பார்க்க வேண்டும். காவல் நிலைய காமிரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வையில், அப்பகுதியில் மணல் கொள்ளை நடக்காமலிருக்க தனிப் படை அமைக்கப்பட வேண்டும் என்றார்.