states

பிரதமர் மோடி பகல் கனவு காண வேண்டாம்... 2024-இல் பாஜக துடைத்தெறியப்படுவது உறுதி!

பாட்னா, செப்.3- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிதிஷ் குமா ரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 6 எம்எல்ஏ-க்கள் இருந்த நிலையில், அவர்களில் 5 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அண்மையில் பீகாரில் ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தைத் தொடர்ந்து, மணிப்பூரிலும் பாஜக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்  பெறுவது தொடர்பாக நிதிஷ்குமார் ஆலோசனை மேற்கொண்டு வந் தார். இந்நிலையிலேயே, அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஐக் கிய ஜனதாதளத்தின்  எல்.எம்.கட்டே,  தன்ஜம் அருண்குமார், அஜ்ஜப் உதின், நுக்ருசுன்கர், ஜாய்கிஷான் சிங் ஆகிய 5 எம்எல்ஏக்கள் பாஜக வில் இணைந்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு, பீகார் மாநில பாஜக தலைவரும், அம்  மாநில முன்னாள் துணைமுதல்வரு மான சுஷில் மோடி, ‘’அருணாசல பிரதேசத்தை தொடர்ந்து மணிப்பூரி லும் ஐக்கிய ஜனதா தளம் துடைத் தெறியப்பட்டுள்ளது. விரைவில் பீகாரிலும் லாலு கட்சியால் ஐக்கிய  ஜனதா தளம் விரைவில் காலி செய்யப்படும்’’ என்று கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், பிரதமர் மோடி பகல்  கனவில் இருக்க வேண்டாம். 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்த லில் பாஜக துடைத்தெறியப்படும். அருணாசல பிரதேசத்தில் கூட்டணி தர்மத்தை பாஜக பின்பற்றவில்ல. அருணாசல பிரதேசம், மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்தியே ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது என்பது நினைவில் இருக்கட்டும். எனவே, ஐக்கிய ஜனதா தளத்தை விடுவித்து விடலாம் என்று பகல் கனவு காணவேண்டாம்’’ என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.