states

img

வர்த்தகர்களுக்கு முகமில்லா மதிப்பீட்டு முறையில் உள்ள குறைகளைக் களைந்திட நடவடிக்கை

புதுதில்லி, ஆக.2- முகமில்லா மதிப்பீட்டு முறையில் உள்ள குறை களைக் களைந்திட நட வடிக்கைகள் எடுக்கப் படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நட ராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்  சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்  தின்போது பி.ஆர். நடராஜன், புதிய முறை யான முகமில்லா மதிப்பீட்டுக்குழு (Faceless  Assesment Group - FAG) அதிக குழப்பத்தை விளைவித்து, தொழில்நுட்பத்தின் பெய ரால் நேர்மையான வர்த்தகர்களுக்கு மறை முகமாக துன்பம் கொடுத்துள்ளது. அறி முகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே இந்த நடைமுறை தோல்வி அடைய செய்வ தாக உள்ளது.இதனால் இந்த புதிய முக மில்லா மதிப்பீட்டுக்குழுவை கைவிடக் கோரி  இறக்குமதியாளர்களிடமிருந்து ஏதேனும் கோரிக்கைகளை அரசு பெற்றுள்ளதா? என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.  மேலும், இறக்குமதி அனுமதியில் தேவை யற்ற கால தாமதத்தை தவிர்த்து, தொழிலை  பாதுகாக்க முகமில்லா மதிப்பீட்டுக் குழுவை  கைவிட்டு பழைய பில்கள் நுழைவு (Bills  of Entry - BE) முறையை மீண்டும் கொண்டு வரும் முன்மொழிவு ஏதேனும் அரசிடம் உள்  ளதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள்  என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறியதாவது:

“2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட, முகமில்லா மதிப்பீட்டு முறையில்,  முன்னேற்றங்களை செய்ய, ஆலோசனை கள் வழங்குவதில் தாங் கள் எதிர்கொள்ளும் பிரச்  சனைகளை தெரியப் படுத்துவதற்காக, இறக்கு மதியாளர்கள், சுங்கத் தர கர்கள், தொழில் கூட்ட மைப்புகள் ஆகியோரிட மிருந்து சில கோரிக்கை கள் பெறப்பட்டன. முக மில்லா மதிப்பீட்டு முறை யை கைவிடுமாறு எந்த கோரிக்கையும் பெறப்  படவில்லை. முகமில்லா மதிப்பீட்டு நடைமுறையை நெறிப்படுத்திட முன்னேற்ற நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதிப்பீட்டு  வாயிலாக தவிர, பிற வழிகளில் அபா யங்களை நிவர்த்தி செய்தல், முகமில்லா மதிப்பீட்டுக் குழுக்களின் செயல்பாட்டில் உயர்ந்த அளவு நிபுணத்துவத்தை கொணர் தல், மதிப்பீட்டு நிலைகளில் ஏற்படும் குறை பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, அநாம தேய விரிவாக்கப் பொறிமுறையை அறி முகம் செய்தல், சீரான தன்மையை அதிகப்  படுத்த, தானியங்கி அமைப்பு அடிப்படையி லான தேர்வு முறையை சில வழக்குகளில் உருவாக்குதல், முகமில்லா மதிப்பீட்டுக் குழு  மற்றும் தேசிய மதிப்பீட்டு மையங்களை மறு கட்டமைப்பு செய்வதன் மூலம் மனிதவள வரி சைப்படுத்துதலுடன் பணிச்சுமையை சிறப்பாக சமப்படுத்துதல் ஆகியவை இந்த  நடவடிக்கைகளில் அடங்கும். இறக்குமதியை மதிப்பீடு செய்தல் என்பது, அபாயங்களை நிர்வாகம் செய்யும் முறையால் தடை செய்யப்படுவது என்னும் செயல்பாடு, ஒழுங்குபடுத்தும் சூழல், பண்  டங்களின் தன்மை ஆகியவற்றில் ஏற்படும்  மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணி களால் மாறும் தன்மை கொண்டது. மேலும்  தேவைப்படும் போது, அந்த மாற்றங்களுக்கு ஏற்ப, முகமில்லா மதிப்பீட்டு வடிவமைப்  பினை சரி செய்தல் என்பது மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.(ந.நி.)