புதுதில்லி, பிப். 4 - ஒன்றிய அரசு பரிந்துரைத்த, ‘நீதி பதிகள் தேடல் குழு’ ஒரு ‘உதவி யாளர்’ என்ற இடத்தில் மட்டுமே இருக்கும்; மற்றபடி இறுதிமுடிவெ டுக்கும் இடத்தில் கொலீஜியமே இருக்கும் என்று கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ளார். நீதிபதிகள் நியமன விவகாரத் தில், ஒன்றிய பாஜக அரசு தங்க ளுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறிவருகிறது. அந்த அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கள் அடங்கிய ‘கொலீஜியம்’ அளிக்கும் பரிந்துரைகளை கிடப்பில் போட்டும் மோதல் போக்கைக் கையாண்டு வருகிறது. ஜனவரி 6 ஆம் தேதி, ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டு க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், நீதிபதிகள் நியமனத்தில் அரசாங் கத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட ‘தேடல் மற்றும் தேர்வுக் குழு’வைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னார். இந்நிலையில், “நீதிபதிகளைத் தேர்வு செய்ய அரசாங்கம் அதன் பரிந்துரையாளரைக் கொண்ட தேடல் குழுவை நாடியுள்ளதா?” என்று காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் (கேள்வி எண்: 119) மாநிலங்களவை யில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வ பதிலை வழங்கி ுள்ளார்.
அதில், “உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கொலீஜி யத்துக்கு, உதவுவதற்காக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மட்டங்களில் ஸ்கிரீனிங் மற்றும் மதிப்பீட்டுக் குழுவை அரசாங்கம் பரிந்துரைத்தது. இந்த குழுக்கள், நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தகுதி உள்ளிட்ட விஷயங்களை ஆராயும். எனினும், இந்தியத் தலைமை நீதி பதிக்கு பரிந்துரைத்துள்ள ‘தேடல் மற்றும் தேர்வுக் குழு’ ஒரு உதவி செய்பவராக மட்டுமே செயல்படும். நீதிபதிகளைப் பரிந்துரைக்கும் இறுதி முடிவு கொலீஜியத்திடமே இருக்கும்” என்று விளக்கம் அளித்துள்ளார். “இதுபோன்ற பரிந்துரை 2015-ஆம் ஆண்டிலும் செய்யப்பட்டது. ஆனால், அத்தகைய குழுக் களை அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை” என்றும், ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் ராம் நாத் தாக்கூர் எழுப்பியிருந்த மற்றொரு கேள்விக்கு, கிரண் ரிஜிஜூ பதில ளித்துள்ளார். “22.3.2016 அன்று மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதிக்கு நீதி பதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறை குறிப்பாணை (MoP) அனுப்பப்பட்டது. திருத்தப்பட்ட உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பதில் வரைவு (MoP) 25.05.2016 மற்றும் 01.07.2016 அன்று பெறப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்ற கருத்து களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசின் பார்வை 03.08.2016 அன்று தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, அப்போ தைய இந்தியத் தலைமை நீதிபதி, 13.03.2017 தேதியிட்ட கடிதத்தை அரசாங்கத்திற்கு அனுப்பினார்” என்றும் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.