ஒன்றிய அரசு துறை களில் சிபிஐ, வருமான வரித்துறை, சுங்கத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள குரூப் “பி” மற்றும் “சி” பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங் கிணைந்த பட்டதாரி நிலை (Combined graduate Level) தேர்வுக் கான அறிவிப்பை பணி யாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டது. தகுதி உள்ளவர்கள் மே 3-ஆம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி யின் (SVB) சரிவு, நீண்ட காலமாக நடைமுறைப்ப டுத்தப்பட்ட மிக மோசமான பொருளாதார த்தின் விளைவாகும். ஒரு வங்கி திடீரென திவாலாவது கிடையாது. பெடரல் ரிசர்வ் வங்கி யின் பல்வேறு கொள்கை களால் சிலிக்கான் வேலி வங்கி திவாலானது என வணிக நிறுவனங்களை கையாள தேவைப்படும் மென்பொருளை தயா ரிக்கும் நிறுவனமான ஜோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதி காரி ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த சுப்பிரமணி (82) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தில்லியில் உள்ள அரசு வீடுகளில் தங்கியிருக் கும் ஏர் இந்தியா விமான நிறுவன பணியாளர்கள் ஜூலை 31-ஆம் தேதிக் குள் காலி செய்ய வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நீரிழிவு நோயை இய லாமையாகக் கருதி எம்பி பிஎஸ் படிப்பில் இடஒதுக் கீடு வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் மாநில அரசுதான் முடி வெடுக்க வேண்டும் என, நீட் தேர்வு எழுதி மருத்து வப் படிப்புக்கு விண்ணப் பித்த மாணவியின் கோரி க்கை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவர் காலித் அய்த் அஹ்மத் அல்-ஜபூரி கொல்லப்பட்டதாக அறி விக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் தகவல் களை தவறாக பயன் படுத்தியதற்காக உல கின் பிரபல சமூக வலை தளமான டிக் டாக் (TIK TOK) நிறுவனத்திற்கு ரூ.130 கோடி அபராதம் விதித்துள்ளது இங்கி லாந்து அரசு.
ஊக்கமருந்து செலுத்திக் கொண்டது உறுதி செய்ய ப்பட்டதால் காமன்வெ ல்த் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவிற்கு 4 ஆண்டுகள் தடை விதி த்தது தேசிய ஊக்க மரு ந்து தடுப்பு ஆணையம்.
உலகச் செய்திகள்
இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் அடையும் சூழல் உருவாகியிருப்பதால், உயர்மட்ட பயணங்களுக்கும் ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு வந்திருப்பதை ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முகமது மோக்பர் உறுதிப் படுத்தியிருக்கிறார்.
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் தொடர்ந்து கூட்டாகப் போர்ப் பயிற்சிகளைச் செய்து வருவதால்தான் கொரியப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சியை இந்த நாடுகள் நடத்தி வருகின்றன. இதுபோன்ற ராணுவப் பயிற்சிகளை நிறுத்திவிட்டு, அமைதிக்கான சூழலை உரு வாக்க வேண்டும் என்றும் சீனா, மூன்று நாடுகளையும் வலியுறுத்தி யிருக்கிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினோ ஃபசோவில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டு நிருபர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார்கள். தங்கள் நாடு பற்றி தவறான தகவல்களை பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் தருவதாகக் குற்றச்சாட்டுகளை பர்கினோ ஃபசோ அரசு கூறி வந்தது. லி மாண்டே மற்றும் லிபரேசன் ஆகிய இரண்டு பத்திரிகைகளில் பணியாற்றும் சோஃபி டோஸ் மற்றும் அக்னெஸ் பைவ்ரெ ஆகிய இரண்டு நிருபர்களையும் நாட்டை விட்டு பர்கினோ ஃபசோ அரசு வெளியேற்றியுள்ளது.