சிபிஎம் கடும் கண்டனம்
சென்னை, ஜூலை 16- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து எரி பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற் கொண்டு மக்களை அவதிப்பட வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்து மக்கள் மீதான துல்லியத் தாக்குதலை நடத்தி யுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியின் விகிதத்தை கடுமையாக உயர்த்தியதோடு, பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை புதிதாக ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இத னால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரு மளவு பாதிக்கப்படுகின்றனர்.
அண்மையில் பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி மற்றும் கோதுமை உள் ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்க ளுக்கும் இனிமேல் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவ தோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோ விற்கு ரூ .3 முதல் ரூ. 5 வரையிலும் விலை அதி கரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்க னவே பணவீக்கத்தாலும், கடுமையான விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட் டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலையும் உருவாகி யுள்ளது.
ஒன்றிய அரசின் இத்தகைய மோசமான முடிவை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழு வதும் உள்ள அரிசி ஆலைகள், மொத்த மற்றும் சில்லரை வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவ தென முடிவு செய்துள்ளதோடு, தமிழகம் முழு வதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் ஜூலை 16 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறுகின்றன. ஒன்றிய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வன்மையாக கண்டிப்பதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியா வசிய உணவுப் பொருட்களின் மீது விதித் துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அண்மை யில் உயர்த்தப்பட்டுள்ள இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலி யுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது