states

விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையை விழுங்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்

புதுதில்லி, ஜூலை 26-  மோடி அரசின் வழிகாட்டலில் விவ சாயிகளைச் சுரண்டி, அவர்களின் பயிர்க் காப்பீட்டுத்தொகையை கார்ப்ப ரேட் கம்பெனிகள் விழுங்குகின்றன. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வ தன் மூலம் விளைச்சலில் பாதிப்பு ஏற் படும் காலத்தில் பொருளாதாரரீதியாக அவர்களை பாதுகாக்கிறது. விவசாயிகளின் மகசூல் இழப்பைக்  காப்பீடு செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு பாஜக அரசாங்கத்தால் பிரதான்  மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் துவங்கப்பட்டது.தற்போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட நோக்  கமான விவசாயிகளை பாதுகாப்பதை விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் லாபம் ஈட்டித்தரும் திட்டமாக மாறி  உள்ளது. விவசாயிகள் நலன் தொடர் பாக ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங்  தோமர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சமீபத்திய தரவுகளின் அடிப்ப டையில், இந்த உண்மை வெளி வந்துள்ளது. திட்டம் கொண்டு வந்த ஆண்டு முதல் விவசாயிகள் செலுத்தும் காப் பீடு தொகை அதிகரித்து வருகிறது  ஆனால் விவசாயிகளுக்கு திரும்ப வழங்கப்படும் இழப்பீடுகள் அதிகள வில் குறைந்துள்ளதை அவர் சமர்ப் பித்த தரவுகள் காட்டுகின்றன. 2016 முதல் 2019 வரை விவசாயிகள் செலுத்  திய காப்பீட்டு தொகைக்கும் அவர்கள் பெற்ற இழப்பீட்டு தொகைக்கும் பெரும்  வேறுபாடுகள் இல்லை.ஆனால் 2019-2020 ஆண்டு முதல் விவசாயிகள் செய்த  காப்பீடு தொகை மட்டுமே அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் பெரும் இழப்பீடு தொகையின் அளவு மிக  குறைவாக உள்ளது.2022-2023 ஆண்  டில் விவசாயிகள் 27,900.78 கோடி ரூபாய் அளவிற்கு பயிர் காப்பீடு செய்  துள்ளனர்.ஆனால் 5,760.80 கோடி  மட்டுமே இழப்பீடாக அந்த நிறுவனங் களிடம் இருந்து பெற்றுள்ளனர்.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு விவசாயிகள் செய்துள்ள பயிர் காப்பீடு மற்றும் அவர்கள் பெற்ற இழப்பீடு தொகைக்கு மான இடைவெளி மலைக்கும் மடு விற்கும் போல் உள்ளது குறிப்பிடத்தக் கது. விவசாய காப்பீட்டு நிறுவனங்க ளும், விவசாயிகள் இழப்பீடு கோரும் போது உரிய தொகையை தராமல் இழுத்தடிக்கின்றன.இதனால் விவசாயி கள் தங்களின் இழப்பீடை பெறுவதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி  உள்ளது.விவசாயிகள் காப்பீடு செய்துள்ள நிறுவனங்கள் விவசாயி களையே சுரண்டி பெரும் லாபத்தை அடைந்து வருகின்றன. குறிப்பாக விவ சாயிகள் அதிகளவு இழப்பீடு பெற்ற  போது பல நிறுவனங்கள் வெளியேறிச் சென்றன. பிறகு மீண்டும் இணைந்துள்  ளன. அதாவது பாஜக அரசின் திட்டங்  களானது, கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயிகளை சுரண்டி லாபம் பார்க்க  வழிவகை செய்கிறது. ஒன்றிய அரசு கொடுத்த தரவுகள் மூலமே தெரிய வருகிறது. மேலும் விவசாயிகள் வங்கிகளில் விவசாய கடன் பெறும் போதே இந்த  காப்பீடு தொகையை தனியார் காப்பீடு நிறுவனங்களிடம் வங்கிகள் செலுத்தி  விடுகின்றன. இதனால் காப்பீடு நிறு வனங்களுக்கும் விவாசாயிகளுக்கும் எந்த ஒரு நேரடி தொடர்பும் இல்லா மல் போகிறது. எனவே பயிர் இழப்பை  சந்தித்த 72 மணிநேரத்தில் விவசாயி கள் புகார் அளிக்க வேண்டிய கட்டா யம் உள்ளதாலும் யாரை தொடர்பு கொண்டு புகார் கொடுப்பது என்ற முறை யான வழிகாட்டுதல் இல்லாமலும் விவ சாயிகள் பெரும் சுரண்டலுக்கு உள்ளா கின்றனர்.