புதுதில்லி, ஜூன் 29- பத்திரிகையாளர்களின் கருத்துக்காக அவர் களைக் கைது செய்யக் கூடாது என்று, ‘ஆல்ட் நியூஸ்’ இணை நிறுவனர் முகம்மது ஜூபைரின் கைதுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. போலிச் செய்திகளின் உண்மைத் தன்மை யை ஆராய்ந்து மக்களுக்கு உண்மையைச் எடுத்துச் சொல்லும் ஊடகமாக ‘ஆல்ட் நியூஸ்’ இணையதளமும், அதன் இணை நிறுவனர் முகம்மது ஜூபைரும் இருந்து வருகின்றனர். ஆனால், இந்த வகையில் தாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்படுவதால், பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புக்கள், ஜூபைரை பெரிய தொந்தரவாக கருதி வருகின்றனர்.
இந்நிலையில், முகம்மது ஜூபைரை தில்லி காவல்துறை திங்கட்கிழமையன்று திடீரென கைது செய்தது. 2018-ஆம் ஆண்டு மத உணர்வு களைப் புண்படுத்தும் பதிவுகளை வெளியிட்ட தாக டுவிட்டர் நிறுவனம் கூறியிருந்ததாகவும், அந்த தகவலை நான்காண்டுகளுக்குப் பிறகு புகாராக எடுத்துக் கொண்டு “இந்திய தண்ட னைச் சட்டம் 153ஏ (மதம், இனம், பிறப்பிடம், மொழியின் அடிப்படையில் இருபிரிவினா் இடையே பகையை உருவாக்குதல்), 295ஏ (மத உணா்வை வேண்டுமென்றே காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், முகம்மது ஜூபைரை கைது செய்திருப்பதாகவும் தில்லி காவல்துறை தெரிவித்திருந்தது. ஜூபைர் மீதான இந்த கைது நடவடிக் கைக்கு, இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் (Editors Guild of India), இந்திய பத்திரிகையா ளர் சங்கம் (Press Club of India), ‘ஊடகவிய லாளர் பாதுகாப்புக் குழு’ (Committee to Protect Journalists - CPJ) என்ற சர்வதேச ஊடக நிறுவனம் மற்றும் அரசியல் கட்சித் தலை வர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெ ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரிக் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், “பத்திரிகையாளர்கள் என்ன எழுதுகிறார்கள், டுவீட் செய்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டு, அதற்காகவெல்லாம் அவர்களைக் கைது செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “உலகின் எந்த பகுதியிலும் மக்கள் அனைவரும் பயமின்றி எந்தவித அச்சுறுத்தலு மின்றி தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூற அனுமதிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டி இந்தியா’ நிறுவனத்தின் தலைவருமான ஆகார் படேல் கூறுகையில், “போலிச் செய்திகளை அம்பலப் படுத்தும் முக்கியமான வேலையை செய்வ தற்காகவே ஜூபைர் கைது செய்யப்பட்டுள்ளார். முகம்மது ஜூபைரின் கைது, இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் உச்சம் அடைந்திருப்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “பாஜகவை விமர்சிப்பவர்களை பிரதமர் மோடி பழிவாங்குகிறார். அதற்கு அரசியல மைப்புச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறார். பிரதமர் மோடி சர்வதேச அரங்கில் பேசும்போது, இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை எப்படி நடத்து கிறார் என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண் டும். இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை குறித்து சர்வதேச ஊடகங்கள் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்க உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் கண்ட னம் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரும் அன்ஹாத் நிறுவனரு மான ஷப்னம் ஹஷ்மி, “இது அவசரநிலையை விட மோசமான காலம். சர்வதேச அரங்கில் பிரத மர் சுதந்திரம் பற்றி பேசுகிறார், இது முற்றிலும் பாசாங்குத்தனம்” என்று சாடியுள்ளார். இதேபோல ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையமும், ஜூபைர் கைதுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன், ஜூபைரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத், முன்னாள் காவல்துறை இயக்குநர் ஆர்.பி. ஸ்ரீகுமார், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் கைதுக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கண்டனம் தெரிவித்தி ருந்தது. “டீஸ்டா செதல்வாத் மற்றும் இரண்டு முன் னாள் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம். 2002 #குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடனான அவர்களின் செயல்பாடு மற்றும் ஒற்றுமைக்காக அவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது” என்று கூறியிருந் தது.