மோடி அரசுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
புதுதில்லி, பிப்.23- குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக அரங் கேற்றப்பட்ட மத வன்முறைகள் தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் அரசுத்துறை செய்தி ஒளிபரப்பு நிறுவனமான ‘பிபிசி’ (British Broadcasting Corporation - BBC), ‘இந்தியா- மோடி என்கிற கேள்வி’ (India: The Modi Question) என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மோடி அரசின் வருமான வரித்துறையானது, இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரான்ஸ்பர் பிரை சிங்’ விதிமுறையை ‘பிபிசி இந்தியா’ மீறி யிருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 11.30 மணியளவில், ‘பிபிசி இந்தியா’ நிறுவனத்தின் தில்லி, மும்பை அலுவலகங்க ளுக்குள் புகுந்து சோதனை நடத்தியது. பிப்ரவரி 16 பின்னிரவு 11 மணிவரை சுமார் 60 மணிநேரம் இந்த சோதனை நடைபெற்றது.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. தனக்கு எதிரான ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக, மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், பத்தி ரிகை சுதந்திரத்தை மோடி அரசு பறிக்க முயல் வதாகவும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிகையின் மீதான இந்த தாக்கு தல் மக்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒப்பா கும் என்றும் ‘இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்’, சர்வதேச மனித உரிமை அமைப் பான ‘ஆம்னெஸ்டி’, மும்பை செய்தியாளர் சங்கம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரி வித்தன. “பத்திரிகை சுதந்திரம், கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மற்றும் மத சுதந்தி ரத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவ ளிக்கும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸூம் கண்ட னம் தெரிவித்தார்.
“பிபிசி நிறுவனத்தின் மீது நடத்தப்படும் வருமான வரிச் சோதனையை அறிந்திருப்ப தாகவும், உலகம் முழுவதும் சுதந்திரமான ஊடக செயல்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்த ஊடகச் செயல் பாடு முக்கியம்” எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில், பிபிசி அலுவலகங்கள் மீதான இந்திய வருமான வரித்துறையின் சோதனை, இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் விவாதமாகி உள்ளது. இந்திய அரசானது, பிபிசி ஊடகத்தை மிரட்டும் நோக்கத்துடனே வருமான வரித்துறை சோதனையை நடத்தி யதாக குற்றம் சாட்டியுள்ளனர். ‘பிபிசி இந்தியா அலுவலகங்களில் நடத்தப் பட்ட ரெய்டானது, ஆவணப்படம் வெளியிட்ட காரணத்தால் வேண்டுமென்றே மிரட்டுவ தற்காக நடத்தப்பட்ட ரெய்டு என்பதில் எங்க ளுக்கு குழப்பம் இல்லை’ என ஜனநாயக தொழிற்சங்க கட்சியின் (Democratic Unionist Party - DUP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் ஷானன் குற்றம் சாட்டியுள்ளார்.
“பிபிசிக்கு முழுமையான கருத்து சுதந்தி ரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதனை அந்நிய (இந்தியா) தேசத்தவர் களுக்கும் விளக்க வேண்டி இருக்கிறது” என இங்கிலாந்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டேவிட் ரட்லி கூறியுள்ளார். ‘இந்தியா வின் நிலைமை மிகவும் கவலை தருவதாக இருக்கிறது’ என கன்சர்வேடிவ் கட்சியின் ஜூலி யன் லூயிஸ் பேசியுள்ளார். “இந்தியா ஒரு ஜனநாயக தேசமாக இருந்தாலும் இப்படி ஒரு ரெய்டு நடப்பது கவ லைக்குரியது. இதுகுறித்து பிரிட்டிஷ் அரசு இந்திய அரசிடம் பேசி, ‘பிபிசி இந்தியா’ ஊழி யர்களுக்கு எந்தப் பிரச்சனையும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என எதிர்க்கட்சி யான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேபியன் ஹாமில்டன் வலியுறுத்தி யுள்ளார். அதேபோல “எந்த ஜனநாயகத்திலும் ஊடகங்கள் பயமின்றி அரசை விமர்சிக்கும் நிலை இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கி யமான ஜனநாயகத்துக்கு வழி வகுக்கும். அது இந்த (இந்தியாவில் பிபிசி மீதான ரெய்டு) சம்பவத்துக்கும் பொருந்தும்” என்று காட்ட மாக கூறியிருக்கும் ஸ்காட்லாந்து தேசிய கட்சி (SNP) உறுப்பினர் ட்ரூ ஹென்றி, “பிபிசி மீதான ரெய்டு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டி யது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.