சனாதனத்தை ஒழிப்போம் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் பாஜக தலைவர்களும் அதன் ஆதரவாளர்களும் சங்கிகளும் அதிர்ச்சியடைந்து அலறுகின்றனர். அவருக்கு எதிராக பொய்களை, அவதூறுகளை அள்ளிவீசுகின்றனர். ஆனால் சனாதனத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக பேசினேன்; அதில் நான் உறுதியாக நிற்கிறேன். எந்த மன்றத்திலும் சவாலை எதிர்கொள்ளத் தயார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சனாதனத்தை ஒழிப்போம் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் பாஜக தலைவர்களும் அதன் ஆதரவாளர்களும் சங்கிகளும் அதிர்ச்சியடைந்து அலறுகின்றனர். அவருக்கு எதிராக பொய்களை, அவதூறுகளை அள்ளிவீசுகின்றனர். ஆனால் சனாதனத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக பேசினேன்; அதில் நான் உறுதியாக நிற்கிறேன். எந்த மன்றத்திலும் சவாலை எதிர்கொள்ளத் தயார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடுக் கப்படும் என்றும் அமித் மால்வியா பதிவிட்டார். இதனை குறிப்பிட்டு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்போராட்டத்தை சந்திக்கத் தயார் என்றார். மேலும், திராவிட நிலத்தில் இருந்து சனாதனத்தை ஒழிக்கும் நோக்கம் சிறிதும் குறை யாது என்றும் உதயநிதி பதிவிட்டார். அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை . சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெய ரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலை நிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த் தையிலும் உறுதியாக நிற்கிறேன்.
சனாதன தர்மத்தால் பாதிக்கப் படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக் கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன். சனாதன தர்மம் மற்றும் சமூ கத்தில் அதன் எதிர்மறையான தாக் கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் விரி வான எழுத்துக்களை எந்த மன்றத்தி லும் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். எனது உரையின் முக்கிய அம்சத்தை மீண்டும் வலியுறுத்து கிறேன்: கொசுக்களால், கோவிட்-19, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல, பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நான் நம்புகிறேன். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் நீதிமன்றமாக இருந்தா லும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்தி களை பரப்புவதை நிறுத்துங்கள்.” என்று பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் சனா தன ஒழிப்புப் பேச்சுக்கு எதிராக, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் தில்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
தலையங்கம் - 4