states

உதய்பூர் கொடூரம்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

சென்னை, ஜூன் 29 - ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் உதய்பூரில் தையல் கடைக்காரர் ஒருவர் தலை வெட்டப்பட்டு மிகக்  கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டி ப்பதாக அதன் தலைவர் பேராசி ரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முஹம்மது நபிக ளார், தன்னை நிந்தித்தவர்களை தனது வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியான எந்த தொந்தரவையும், தீங்கையும்  அளிக்கவில்லை. தன்னைத் தாக்கிய மக்களை நபி சபிக்கவும் இல்லை, இந்த சூழலில் நபி மீதான அன்பு  என்ற போர்வையில் தையல் கடைக் காரரை படுகொலை செய்து அதனை சமூகவலை தளத்தில் பரப்பியவர்கள் காட்டுமிராண்டித் தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.  இது முற்றிலும் அராஜகமான செயல். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. இஸ்லாமும் இதனைக் கண்டிக்கின்றது. ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயம்  ஒரே குரலில் இந்த அக்கிரமத்துக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பி யிருக்கின்றது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள்  கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாக வும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.