states

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கிலிருந்து இரண்டு ஆசிரியர்கள் விடுவிப்பு

விழுப்புரம், மே 30- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி  வழக்கிலிருந்து இரண்டு ஆசிரியர் களை விடுவித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13  ஆம் தேதி மர்மமான முறையில் உயிரி ழந்தார். இந்த நிலையில் ஸ்ரீமதியின் மரணத் திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பி னர் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்து வன்முறையில் முடிந்தது. மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அவரது தாய் செல்வி, சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர்  

ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசி ரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்த னர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  இதனிடையே கலவரத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது  செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த  15 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்ம  மரண வழக்கில் சுமார் 1,200 பக்கங் ளை கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமை யிலான விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட முதல்நபராக கீர்த்திகா, 2 ஆவது  நபர் ஹரிப்பிரியா ஆகிய இரண்டு  ஆசிரியர்களை வழக்கில் இருந்து விடு வித்து  விழுப்புரம் தலைமை குற்றவி யல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை ஏதும் இருந்தால், வரும்  5ஆம் தேதிக்குள் தெரிவிக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக ஒரு நபர் விசா ரணை குழு அமைத்து விசாரிக்க  கோரி மேல்முறையீடு செய்யப்போவ தாக ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறியுள்ளார்.