சீன-ஆசியான் கருத்தரங்கு
சீன-ஆசியான் நாகரிகப் பரிமாற்ற ஒத்துழைப்புக் கருத்தரங்கு மே 27 சனிக்கிழமையன்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. சீன-ஆசியான் நாகரிகப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்பு என்பது நடப்புக் கருத்தரங்கின் தலைப்பாகும். பண்பாட்டை இணைப்பாக வும் புத்தகத்தைப் பாலமாகவும் கொண்டு சீனா ஆசியானின் பல்வேறு நாடுகளுடன் இரு தரப்பு மற்றும் பல தரப்புகளின் வெளியீட்டுப் பரிமாற்ற ஒத்துழைப்பு களை மேற்கொண்டு வருகிறது. பரஸ்பர நாகரிகப் பரிமாற்றத்தை ஆழமாக்குவ தோடு, மக்களிடையேயான தொடர்பையும் புரிந்து ணர்வையும் முன்னேற்றியுள்ளது என்று விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.
துருக்கி ஜனாதிபதி தேர்தல்: 2ஆவது சுற்று வாக்குப் பதிவு
துருக்கியில் ஜனாதிபதி தேர்தலுக்கான 2ஆவது சுற்று வாக்குப்பதிவு ஞாயிறன்று நடைபெற்றது. 2 வாரங்களுக்கு முன்பு, மே 14 அன்று நடைபெற்ற முதலாவது சுற்று வாக்குப் பதிவில், வேட்பாளர்கள் மூவரில் எவருக்கும் பாதியளவுக்கும் மேலான ஆதரவு கிடைக்கவில்லை. அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டப்படி, அதிக வாக்குகளைப் பெற்ற முதல் 2 வேட்பாளர்களிடையே 2ஆவது சுற்று வாக்குப் பதிவு நடைபெற வேண்டும். துருக்கியின் அரசுத்தலைவர் தேர்தல் வரலாற்றில் 2ஆவது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது இதுவே முதல்முறையாகும். உள்ளூர் நேரப்படி மே 28 அன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை 2ஆவது சுற்று வாக்குப்பதிவு நடை பெற்றது. வாக்கு எண்ணும் பணியின் முதற்கட்ட முடிவு கூடிய விரைவில் மே 28 நள்ளிரவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுட்டெரிக்கும் கோடை வெயில் இன்றுடன் விடைபெறுகிறது!
சென்னை, மே 28- சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலம் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை 21 ஆம் தேதி (மே 4) தொடங்கி, வைகாசி 14 ஆம் தேதி (மே 29) வரை இந்த கோடை வெயில் நீடித்தது. இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கியது முதல் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்க ளிலும் கடும் வெயில் சுட்டெரித்தது. வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. இந்த காலக் கட்டத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட்டு வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை காத்து கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாடில், கோடை வெயில் மே 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மண்டை உடைப்பு விவகாரம் : திமுக நிர்வாகி நீக்கம்
சென்னை, மே 28- மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளரின் மண்டையை உடைத்த திருச்சி மாவட்டம், நரசிங்கபுரம் ஊராட்சி தலைவரை திமுகவில் இருந்து நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி வடக்கு மாவட்டம், துறையூர் மத்திய ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மகேஸ்வரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு இடத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்களைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரின் மண்டையை உடைத்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி ஓட்டுனர் மணிகிருஷ்ணன், தனபால் உள்ளிட்ட மூன்று பேர் மீது வருவாய் ஆய்வா ளர் பிரபாகரன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 3 பேரையும் காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.