புதுதில்லி, டிச.31- தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத் தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் இடது சாரிகளின் ஆதரவுடன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒன்றிய அர சால் கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஆனால் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது முதல் இந்த திட்டத்துக்கான நிதியை குறைத்து ஒழித்துக்கட்டுவதிலேயே குறி யாக இருக்கிறது. குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுகிறது.தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 214 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்களின் வருகை, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளதாவது
“வெளிப் படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், பணி புரியும் தொழிலாளர்களுக்கான வருகைப் பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. தேசிய மொபைல் கண் காணிப்பு முறை மூலம் இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது”. எனக் கூறியுள்ளது. 2022-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி முதல் 20 அல்லது அதற்கு மேற் பட்ட பணியாளர்களைக் கொண்ட அனைத்து பணியிடங்களிலும், ஆப்ஸ் மூலம் வருகைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. பணிக்கு வரும் தொ ழிலாளர்கள் இரண்டு நேரமும் தங்களது புகைப்படத்தை பதிவேற்றுகின்ற னர். இந்த நிலையில் அனைத்துப் பணியிடங்களிலும் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் 7.55 கோடி குடும்பங்கள் (11.19 கோடி நபர்கள்) இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினர். இந்த எண்ணிக்கை 2021-22இல் 7.26 கோடி குடும்பங்களாக (10.62 கோடி மக்கள்) குறைந்துள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டில், 2022-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வரை 5.21 கோடி குடும்பங்கள் (7.22 கோடி மக்கள்) இந்தத் திட்டத்தின் மூலம் பல னடைந்துள்ளனர்.
தமிழகம்
2022-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் ஊதியத்திற்காக ரூ.5,102, கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக் கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் முரண்பாடுகள் உள்ளதாகவும் வசதி படைத்த மாநிலங்கள் நிதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் பிரதமர் மோடி குறை கூறியிருந்தார். ஏழை மாநிலங்கள் 100-நாள் வேலைத்திட்ட நிதியில் தேவையான பங்கைப் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்த பிரதமர் பல்வேறு மாநிலங்களில் பணியின் தன்மையில் முரண்பாடுகள் உள்ளதாகவும் கூறி யிருந்தார். அதாவது வசதியான மாநிலங்கள், ஏழை மாநிலங்கள் என கூறு போடத் திட்டமிட்டுள்ளது மோடி அரசு. 100-நாள் வேலைத்திட்டத்தை மறுஆய்வு செய்ய முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்தக்குழுவில் பேராசிரியர்கள் அசோக் பங்கஜ், சோனால்டே தேசாய், நிதி ஆயோக் கின் சேகர் போனு, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தலைமைப் பொருளா தார ஆலோசகர் பிரவீன் மஹ்தோ, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகங்கள், நிதி ஆயோக் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஒன்றிய அரசின் மோசமான பார்வை
இந்தக் குழு அறிக்கை அளிக்க மூன்று மாத காலம் அவகாசம் அளித்துள்ளது ஒன்றிய அரசு. ஆனால் அவர்களது பரிந்துரை வருவதற்கு முன்பே திட்டத்தை முடக்கும் சதியின் ஒரு பகுதி தான் டிஜிட்டல் மயம். டிஜிட்டல் முறையில் தொழிலாளி இரண்டு முறை தனது புகைப் படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது பணித்தளத்தில் வேலையை முடித்த தொழிலாளி மீண்டும் டிஜிட்டல் முறையில் புகைப் படத்தை பதிவேற்றம் செய்தாலே சம்பளம் கிடைக்கும்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்
ஜனவரி 1-ஆம் தேதி முதல் வருகைப் பதிவேடு டிஜிட்டல் மயம் என்ற பிரதமரின் அறிவிப்பிற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஏ.லாசர் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். திங்களன்று கடலூரில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்றிருந்த அவர் நமது செய்தியா ளரிடம் கூறியதாவது: 100 நாள் வேலைக்கான நிதி வெட்டப்படுகிறது. மாநில அரசுகளு க்கு தீர்மானித்தபடி ஒன்றிய அரசு நிதி வழங்குவதில்லை. சட்டக்கூலியும் வழங்குவதில்லை. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி கட்ட டப்பணிகளுக்கு மடை மாற்றம் செய்யப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்வதற்கு முயற்சிக்காமல் திட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான வேலை யைத் தான் பிரதமர் செய்கிறார். சாதாரண கூலித் தொழிலாளர்கள் மீது சுமையை ஏற்றுகிறார். ஏதோ டிஜிட்டல்மயமாகிவிட்டால் (மொபைல் ஆப்) ஊழல் குறையும் என்கிறார். தமிழகத்தில் 100 நாள் வேலை 20 முதல் 30 நாட்களே வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் வேலையே வழங்க வில்லை என திங்களன்று நடைபெற்ற மாநாட்டில் விவசாயத் தொழிலா ளர்கள் தெரிவித்தனர். பிரதமரின் உண்மையான நோக்கம் திட்ட பரவலாக்கலை ஒழிப் பது, தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கும் ஒரு அப்பட்டமான நடவ டிக்கையே தவிர வேறில்லை. 100 நாள் வேலையை உறுதிப்படுத்துவது, சம்பளத்தை முறையாக வழங்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவ தற்கு பதில், ஏதோ விவசாயத் தொழிலாளர்களுக்கு செலவழிப்பதால் நாட்டின் பொருளாதாரமே போய்விட்டது என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார் என்றார்.