வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள்
நாமக்கல், நவ. 9 - வாகனங்களுக்கான வரி உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியதை தொட ர்ந்து, மாநிலம் தழுவிய அளவில் லாரி உரிமை யாளர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற் கொண்டனர். 6.5 லட்சம் கனரக வாகனங்களும், 25 லட்சம் இலகு ரக வாகனங்களும் போராட்ட த்தில் பங்கேற்றன.
மேட்டூர், அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர், நவ.9- மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை மாலை 56.42 அடியாக உயர்ந்தது. காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரண மாக அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10ஆயி ரத்து514 கனஅடி யிலிருந்து 14ஆயிரத்து971 கனஅடி யாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 22.09 டிஎம்சியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.4 அடியாகவும், வைகை நீர்மட்டம் 69.85 அடியாகவும் உள்ளது.
டிச.4-இல் நாடாளுமன்றம் கூடுகிறது
புதுதில்லி, நவ.9- நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பிரக லாத் ஜோஷி தெரிவித்தார்.
என்.எல்.சி போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி
புதுச்சேரி, நவ.9- என்.எல்.சி. ஊழியர்களின் போனஸ் தொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை. என்.எல்.சி. ஊழியர்கள் 20 சதவீத போனஸ் வேண்டுமென வலியுறுத்திய நிலையில் 8.33 சதவீதம் மட்டுமே வழங்க முடியுமென என். எல்.சி. தரப்பில் தெரிவிக்கப் பட்டது. பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் தீபாவளி அன்று என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டம் நடத்தத் திட்ட மிட்டுள்ளனர்.
பீகாரில் 65% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!
பாட்னா, நவ. 9 - சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படு த்தப்பட்டோர், பட்டியல் வகு ப்பினர், பட்டியல் பழங்குடி யினருக்கான இடஒதுக் கீட்டை 65 சதவிகிதம் உயர்த்தும் மசோதா வியா ழனன்று பீகார் சட்டமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டு, பெரும்பான்மை உறுப்பி னர்களின் ஆதரவுடன் நிறை வேற்றப்பட்டு உள்ளது. உயர்சாதியினருக்கான 10 சத விகித இடஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் பீகாரில் இடஒதுக்கீட்டு அளவு 75 சத விகிதமாக உயர்கிறது.
உச்சநீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
புதுதில்லி, நவ. 9 - தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் மற்றும் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதி பதி சந்தீப் மேத்தா ஆகி யோர் உச்சநீதிமன்ற நீதிபதி களாக நியமிக்கப்பட்டிருந்த னர். இவர்கள் வியாழனன்று பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது.