திருச்சிராப்பள்ளி, மார்ச் 6- திருச்சி காஜாமலை அல்- ஜமீ ஆத்தூஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழா மற்றும் நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டினை கொண்டாடும் விதமாக காகித கோப்பைகளால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி என்ற சாதனை முயற்சிக்கு திட்டமிட்டது. இதன்படி சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகித கோப்பைகளில் வர்ணம் பூசி 22.5 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்தில் இந்திய தேசியக் கொடியினை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி அந்நாட்டு தேசிய கொடியை 124 சதுர மீட்டர் பரப்பளவில் செய்து உலக சாதனை படைத்தது. தற்போது 337.5 சதுர மீட்டரில் இந்திய தேசிய கொடியை உருவாக்கி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாத னை நிறுவனத்தின் சீனியர் அட்ஜுடி கேட்டர் அமித் ஹிங் ரோனி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் முன்னாள் அசோசியேட் எடிட்டர் மற்றும் மூத்த சாதனை பதிவு மேலாளர் ஜெகன்நாதன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து உலக சாதனை சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் ஜனாப் முகமது ஆரிஃப், செயலாளர் அஹமதுல்லாஹ் ஆகியோரிடம் வழங்கினர்.