states

காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்திடுக: சிபிஎம்

சென்னை,ஏப்.11- அம்பாசமுத்திரத்தில் விசார ணைக்கு அழைத்துவரப்பட்ட வர்களின் பற்களை பிடுங்கிய  காவல்துறை அதிகாரிகள் மீது  உடனே வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட 40-க்கும் மேற்பட்டவர்களின்  பல்லை பிடுங்கிய சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்டவர்கள் கடுமை யான மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர், உடல்நலமும் பாதிக்கப் பட்டுள்ளனர். தவறிழைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தியது. இச்சம்பவங்கள் நடந்து பல நாட்கள் ஆகின்றன. வெளியில் தெரிந்து இரண்டு வாரங்களுக்குள் மேல் ஆகிவிட்டது. ஆனால்,  சம்பவத்திற்கு காரணமான பல்வீர் சிங் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது  இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட வில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. காவல்துறை, தங்களது துறை அதி காரிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதும், பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரால் மிரட்டப்படு வதால் சொந்த ஊர் வருவதற்கு அஞ்சி வெளியூரில் தங்கியிருக் கின்றனர். இதில் காவல்துறை யின் செயல் மிகுந்த கண்டனத்திற் குரியது. எனவே, தமிழக அரசு, தவறி ழைத்த அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.