states

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமான நாள் இன்று!

1910ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் இந்தியப் புரட்சி யாளர்கள் பலர், ஜெர்மனியிலும், ஆப்கானிஸ்தானத்திலும், பிரான்சிலும், பிரேசில் நாட்டிலும் இருந்து கொண்டு இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்க த்தை ஆயுதப்புரட்சி மூலம் தூக்கி யெறிவதற்காகத் திட்டமிட்டு வந்தனர். காமா அம்மையார், வீர சவர்க்கார், வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, வ.வே.சு.அய்யர், எம்.என்.ராய், செண்பக ராமன் பிள்ளை, ராஜா மகேந்திர பிரதாப், பரக்கத்துல்லா, டாக்டர் பூபேந்திரநாத் தத்தா, எம்.பி.டி.ஆச்சார்யா, அபனி முகர்ஜி போன்றோர் அவ்வாறு செயல்பட்டு வந்தவர்கள் ஆவர். ரஷ்யப் புரட்சிக்குப் பின், லெனின் தலைமையிலிருந்த கம்யூனிஸ்ட் அகில மானது இத்தகைய இந்தியப் புரட்சி யாளர்கள் பலருடன் தொடர்பு கொண்டு அவர்களை மார்க்சியப் பாதைக்கு ஈர்க்க முயற்சித்தது. அதன் விளைவாக எம்.என்.ராய், அபனி முகர்ஜி, எம்.பி.டிஆச்சார்யா போன்றோர் ரஷ்ய நாட்டி ற்குச் சென்று புரட்சியின் விளைவுகளை நேரில் கண்டனர். 1919ஆம் ஆண்டு மே மாதத்தில் மகேந்திர பிரதாப் தலைமை யில் பேராசிரியர் பரக்கத்துல்லா, மௌல்வி அப்துல் ரப், எம்.பி.டி. ஆச்சார்யா, தலிப் சிங் கில், மஹேந்திர பிரதாபின் உதவியாளர் இப்ராஹிம் ஆகிய ஆறு பேர் கொண்ட தூதுக்குழு மாஸ்கோவில் ரஷ்ய அரசாங்கத் தலைவர் லெனினைச் சந்தித்து உரையாடியது. பின்னர் எம்.என்.ராயும் லெனினைச் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்டு களின் முதல் அமைப்பு உருவாக்கப் பட்டது. எம்.என்.ராய், அவருடைய துணை வியார் எல்லின் ராய், எம்.பி.டி.ஆச்சார்யா, முகமது ஷாபிக் சித்திக், முகமது அலி, அபனி முகர்ஜி, அவரது துணைவி யார் ரோஸா பிட்டிங் ஆகிய எழு வரைக் கொண்ட முதல் குழு உரு வாக்கப்பட்டது. முகமது சித்திக் இக்குழு வின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.