புதுதில்லி, ஏப்.1- எல்ஐசி பங்குகளை விற்க முயற்சிக் கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் தொடர் போராட் டங்களை நடத்தி, மார்ச் 28,29 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திலும் பங்கேற்ற னர். இந்நிலையில் எல்.ஐ.சி வழங்கும் நிதியை அதிகளவில் பெறுவதில் தமி ழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மார்ச் 28 அன்று எழுப் பிய கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். வேலை நிறுத்தத்தின் நியாயத்திற்கு இது சாட்சியம் என்று கருத்து தெரி வித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: மாநில அரசின் பத்திரங்களில் மட்டும் எல்.ஐ.சி செய்துள்ள முதலீடுகள் ரூ. 9.66 லட்சம் கோடிகள். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் எல்.ஐ.சி.யின் நிதியாதார திரட்டல் கிடைத்திருப்பதை அமைச்சரின் பட்டியல் தெரிவிக்கிறது. 2021 டிசம்பர் 31 வரையிலான மாநில அரசு பத்திர முதலீடுகளில் தமிழ்நாட் டுக்கு ரூ. 1,04,009 கோடிகள் கிடைத்தி ருக்கின்றன.
அதிக முதலீடுகள் பெற்ற மாநிலங்களின் வரிசையில் இரண்டா வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முதல் இடத்தில் உள்ள மேற்கு வங்காளம், தமி ழகத்தை விட ரூ.440 கோடி மட்டுமே கூடு தல் பெற்றுள்ளது. ஆந்திர பிரதேசம் ரூ. 92 ஆயிரம் கோடி, தெலுங்கானா ரூ. 91 ஆயிரம் கோடி, மகாராஷ்டிரா ரூ. 76 ஆயி ரம் கோடி, உத்தரப்பிரதேசம் ரூ.58 ஆயி ரம் கோடி, கேரளா ரூ. 55 ஆயிரம் கோடி என்ற அளவில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மிகப் பெரும் நிதி நெருக்கடிகளுக்கு மாநில அரசுகள் ஆளாகி வரும் நிலை யில், ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய தொகைகள் நிலுவையாக உள்ள சூழலில் எல்.ஐ.சி யின் பங்க ளிப்பு குறிப்பிடத்தக்கது. தேச நிர்மா ணத்தில், சமச்சீரான வளர்ச்சியை ஓர ளவு உறுதி செய்வதில் எல்.ஐ.சி யின் பங்கு மிக மிக முக்கியமானது.
இவ்வளவு பெரிய அளவிலான நிதி யாதாரங்களை வழங்குகிற எல்.ஐ.சி யின் பங்கு விற்பனைக்கு ஒன்றிய அரசு முயற்சிப்பதுதான் முரண்பாடு. ஏற்கெனவே எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகெல் ஆகியோர் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். கேரள சட்டமன்றத்தில் எல்.ஐ.சி பங்கு விற்பனையைக் கைவிட வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது மாநில நிதியாதாரங்கள் மீதான தாக்கு தல். கூட்டாட்சி மீதான தாக்குதல். இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கும் எதிரானது. அதன் நியாயத்திற்கு அமைச் சரின் பதில் ஒரு சாட்சியம். ஒன்றிய அரசே, நாடு தழுவிய தொழிலாளர் சங்க மத்தின் உரத்தக் குரலாவது உனது காது களில் கேட்கிறதா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.