states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அடையாளம் தெரியாத உடல்களைக் கண்டு பிடிப்பதற்காக “டிஎன்ஏ தர வுத்தளத்தை” உருவாக்கிய முதல் இந்திய மாநிலம் என்ற சிறப்பை இமாச்சல பிரதேசம் பெற்றுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தரவுத்தளத்தின் மூலம் மக்கள் தங்கள் உற வினர்களின் உடல்களை அடையாளம் காணவும், குற்றவியல் விசாரணை களுக்கும் உதவுகிறது.  இது வரை 150 டிஎன்ஏ மாதிரி களின் பதிவுகள் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட் டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.

மதுரை இடையபட்டி அருகே 85 ஏக்கரில் ரூ.400 கோடி மதிப்பில் புதிய  சிறைச்சாலை அமைக்கப் பட உள்ளது. தற்போது நகர் பகுதியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான மத்திய சிறைச்சாலையை இடையபட்டிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் அறிவித்து ள்ளது.

வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாமில் திங்களன்று மாலை 3.7  ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அசாமை போல துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் மிதமான அளவில் திங்களன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவும் ரஷ்யாவும் தாராள வர்த்தக ஒப்பந் தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவ தாக இரு நாட்டு வெளி யுறவுத்துறை அமைச்சர் களும்  கூட்டாக தெரி வித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை யில் பள்ளிக்கு செல்லாத மாணவர்களின் வீட்டிற்கு  நேரில் சென்று இடை நிற்றலின் பின்விளை வை பெற்றோருக்கு எடுத்துக்கூறி, பெற்றோர் ஒப்புதலுடன் மாணவர் களை தேர்வெழுத வைத் தார் அப்பகுதி உதவி காவல் ஆய்வாளர் பரம சிவம்.

40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கை களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை வழங்கும் திட்டத்திற்காக 2023-24ஆம் நிதியா ண்டில் ரூ.2.36 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தமிழ்நாடு சமூக நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரி வித்துள்ளது. இதன் மூலம்  திருநங்கை களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000 லிருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.