காலிப்பணியிடங்களை நிரப்பிடுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை,டிச.21- டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை -2023 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும். காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணை யம் வெளியிட்டுள்ள, 2023 தேர்வு அட்ட வணை, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடி யாக இப்பிரச்சனையில் தலையிட்டு, குறை பாடுகளை நீக்கி, தமிழ்நாட்டு இளைஞர் களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்து கிறது.
தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணை யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை யில், குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் - 4 பணி யிடங்களுக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்படவில்லை. மொத்தமாகவே 1754 பணியிடங்கள்தான் நிரப்பப்படும் என்ப தாக அந்த அறிவிக்கை தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில், ஓராண்டு காலத்திற்கு புதிய நியமனங்கள் மிகச் சொற்பமாகவே நடக்கும் என்பது அரசுப் பணிகளை பாதிக்கும், இட ஒதுக்கீட்டு உரிமையை பாதிக்கும் என்பது டன் வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும். டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை மீது விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குரூப் 1 பணி யிடங்களுக்கான அறிவிக்கை 2023 ஆகஸ்ட் மாதத்தில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள தை வரவேற்கிறோம். அதே போல, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகளின் அறி விக்கையே 2023 நவம்பரில்தான் வெளி யாகும், தேர்வுகள் 2024 தான் நடக்கும் என்பதை மாற்றி, 2023 ஆம் ஆண்டிலேயே தேர்வுகள் நடத்த வேண்டும், குரூப் 2 மற்றும் 2ஏ, சிவில் நீதிபதி, உதவி வேளாண்மை அலுவலர் பணிகளுக்கும் அட்டவணை வெளியிட வேண்டும். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலு வலகங்களில் நடக்கும் போட்டித் தேர்வு பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான மாண வர்கள் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சி யை பெறுகின்றனர். தேர்வுகளை நடத்தினால் தான் அந்த மாணவர்களுக்கு பணி வாய்ப்பி னை வழங்கிட முடியும். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலை யீடு செய்து, அட்டவணையை திருத்தி வெளி யிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.