states

img

ம.பி.யில் பாஜக தோல்வி உறுதியாகிறது..?

போபால், செப். 30 - மத்தியப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுவ தாகவும், எனினும் பாஜகவைக் காட்டிலும் கூடுதலான இடங்களைப் பெற்று காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் டைம்ஸ் நவ் நவ்பாரத் இடிஜி (Times Now Navbharat ETG) இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018 தேர்தலில் பாஜகவுக்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உரு வெடுத்தது. தொடர்ந்து கமல்நாத் மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றார். இருப்பினும், அங்கே காங்கிரஸ் ஆட்சி 15 மாதங் கள் மட்டுமே நீட்டித்தது.  காங்கிரசின் முக்கியத் தலை வராக இருந்த ஜோதிராதித்ய சிந்தி யாவை வளைத்துப் போட்ட பாஜக அவர் மூலமாக, 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்தது. பின்னர் அவர்களை பாஜக-வில் சேர்த்துக் கொண்டது. இத னால் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் முதல்வரானார்.  இந்நிலையில், மத்தியப் பிரதே சத்தில் 2023 இறுதியில் சட்டப்பேர வைத் தேர்தல் நடக்கும் நிலையில், ‘டைம்ஸ் நவ் நவ்பாரத் இடிஜி’ இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக ளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், 42.80 சதவிகித வாக்கு களுடன் பாஜக 102-110 இடங்களை யே வெல்லும் என்றும், காங்கிரஸ் கட்சி 43.80 சதவிகித வாக்குகளுடன் 118-128 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 13.40 சதவிகித வாக்குகளுடன் 0-2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  230 இடங்களைக் கொண்ட மத்தி யப் பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.