பருவநிலை மாற்றம் காரணமாக வட அமெரிக்கா நாடான கன டாவில் இடியுடன் கூடிய கனமழை மிரட்டி வரு கிறது. இந்த கனமழைக்கு உலகின் உயரமான கோபுரங்களில் ஒன்றான டொரோண்டோவில் உள்ள சிஎன் கோபுரம் (553.3 மீ உயரம்) மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது. இடி தாங்கி உள்ளிட்ட பல் வேறு சிறப்பு அம்சங்கள் கோபுரத்தில் பொருத்தப் பட்டு உள்ள நிலையில், எப்படி கோபுரத்தில் மின்னல் தாக்குதல் ஏற் பட்டது என்பது தொடர் பாக வானியல் அறி ஞர்கள் ஆய்வில் ஈடு பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப் பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை யும், 109 படகுகளையும் விடுவித்திட உடனடி நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்ச ருக்கு தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி கழிவறை சுவர் இடிந்த தில் 10ஆம் வகுப்பு மாண விகள் 5 பேர் காயமடைந்த னர்.
உலகச் செய்திகள்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புதிய தூதராக ரேசா அமெரியை ஈரான் நியமித்துள்ளது. ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னால் இது நடந்திருக்கிறது. சீனாவில் ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசும் நிலையில் இந்த நியமனத்தை ஈரான் மேற்கொண்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரேசா அமெரி, ஏற்கனவே அல்ஜீரியா, சூடான் மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகளில் பணியாற்றியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 20 லட்சம் பணியிடங்களுக்கு ஊழியர்கள் இல்லாத நிலையில், வெளிநாட்டில் இருந்து வேலைக்காக வருபவர்களுக்கு எத்தகைய தடைகள் இருக்கின்றன என்று ஜெர்மனி ஆய்வு செய்து வருகிறது. வரும் ஆண்டுகளில் திறமையுள்ள ஊழியர் பற்றாக்குறை பெரும் சவாலாக இருக்கப் போகிறது. ஐரோப்பிய யூனியனைத் தாண்டி வேறு நாடுகளில் இருந்து வருபவர்களை ஊக்குவிக்க குடியேற்றச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க சீனாவுக்கு முக்கியமான பாத்திரம் இருப்பதாக பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள போலந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மக்ரோன், “ரஷ்யாவுடனான நெருக்கமான உறவை சீனா வைத்துள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை மீட்பதில் சீனா முக்கியமான பாத்திரத்தை வகிக்கலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.