பஸ்தி(உ.பி.,), ஜூன் 8- உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் பாஜக தலை வர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பஸ்தி காவல்கண்கா ணிப்பாளர் கோபால் கிருஷ்ண சவுத்ரியா கூறு கையில், “திங்கள்கிழமை மாலை காய்கறி வாங்கச் சென்ற சிறுமியை மோனு சாஹ்னி (19), ராஜன் நிஷாத் (21), குந்தன் சிங் (23) ஆகிய மூன்றுபேரும் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் சடலத்தை செவ்வாய்க்கிழமை பஸ்தி மாவட்டத்தில் உள்ள பைராவ் என்ற இடத்திலிருந்து காவல்துறையினர் கைப்பற்றி னர். குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 376 (பாலியல் பலாத்காரம்), 302 (கொலை) மற்றும் 506 (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையில் பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் குடும்பத்தினர் அவரது உடலை சாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியின் உடலை புதன்கிழமை உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
தவிர கும்பல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாது காத்தல் சட்டம் (போக்சோ) பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கவுர் காவல் நிலைய ஆய்வா ளர் பிரிஜேஷ் படேல் கூறுகையில், “குற்றம்சாட்டப் பட்ட குந்தன் சிங்கின் வீட்டில் இருந்து ரத்தக் கறை படிந்த பெட்ஷீட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்” என்றார். முன்னதாக புதன்கிழமை செய்தியாளர்களி டம் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, “குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது. ஏனெனில் அவர் ஒரு பாஜக தலைவர். அவருக்கு ஆதரவாக காவல் துறையினர் செயல்படுகின்றனர். அவர் எங்கள் பகுதி பாஜகவின் கிசான் மோர்ச்சா பிரிவின் மண்டலத் துணைத் தலைவர். என் மகள் சந்தையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த நபர்கள் அழைத்துக்கொண்டு காலியாக இருந்த பள்ளி க்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர், எனது மகள் இறந்துவிட்டாள். அதன் பிறகு, அவர்கள் அவரது உடலை ஒரு காலியாகக் கிடந்த இடத்தில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மேலும் தமக்கு உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்துள் ளது. அதில் எனது மகள் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அதுல் சவுத்ரி மற்றும் மகேந்திர யாதவ் ஆகியோர் புதன்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.