அகில இந்திய அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும், சிஐடியு அசாம் மாநிலச் செயலாளருமான உஷாராணி அசாம் காவல்துறையினரால் கவுகாத்தி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அசாம் மாநில பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு அங்கன்வாடி தொழிலாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் உஷாராணி தலைநகர் தில்லி யில் பிப்ரவரி 13இல் இருந்து நடை பெற்றுவரும் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வரும் போது, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் பிப்ரவரி 13இல் இருந்து தில்லி யில் காலவரையற்ற வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களும் கவுகாத்தியில் பிப்ரவரி 26இல் இருந்து இதில் முழுமையாக பங்கேற்றிருக்கிறார்கள். இந்நிலையில், போராடும் ஊழி யர்கள் மீது அசாம் மாநில பாஜக அர சாங்கம் மிகவும் கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவியுள்ளது. மார்ச் 11 அன்று காவல் துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திரா நேவாருக்கு கொடுங் காயங் கள் ஏற்பட்டிருக்கின்றன. சங்கத்தின் தலைவர் உஷாராணி, போராட்டத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டபோது கவுகாத்தி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மிகவும் வாக்குவாதம் நடைபெற்ற பின்னர் அவர் விடுவிக்கப்பட்டி ருக்கிறார். காவல் துறையினரின் கூற்றுப்படி இவர் மீதான நடவ டிக்கை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் நடந்ததாக தெரி கிறது. உஷாராணி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதுவும் பேசக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறார். பாஜக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை அகில இந்திய அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்மேளனம் கண்டிக் கிறது. சட்டம்-ஒழுங்கு என்ற பெயரில் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் கொண்டிருக்கிறது. இதனை தொழிற்சங்கங்கள் மக்களின் ஆத ரவுடன் உறுதியுடன் எதிர்கொள்ளும் என்று சங்கத்தின் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.