states

img

ராகுலை நாட்டை விட்டே வெளியேற்றச் சொல்கிறார் குண்டுவெடிப்பு சாமியாரிணி!

புதுதில்லி, மார்ச் 13- வெளிநாட்டுப் பெண்ணுக்குப் பிறந்தவர்கள் தேசபக்தர்களாக இருக்க முடியாது என்றும், ராகுல் காந்தியை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்றும் பாஜக எம்.பி.யும் சாமி யாரிணியுமான பிரக்யா சிங் தாக்  குர், தரமற்ற முறையில் பேசி யுள்ளார். போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருப்ப வர், பிரக்யா சிங் தாக்குர். சாமி யாரிணியான இவர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கி யக் குற்றவாளி ஆவார். அத்து டன் சர்ச்சைப் பேச்சுக்கு பெயர்  போனவர்.‘கோமியம் அருந்திய தால் எனது புற்றுநோய் குணமா னது’; ‘எனது சாபம் காரணமா கவே மும்பை பயங்கரவாத தடுப்  புப்படையின் தலைவர் ஹேமந்த்  கார்கரே இறந்து போனார்’;  ‘கோட்சே மிகச்சிறந்த தேசிய வாதி’ என்று சர்ச்சையாகவும், அவதூறாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடைசியாக, பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவதாகவும், இதற்கு எதிர்க்  கட்சிகள் சூனியம் வைத்திருப்பதே காரணம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், லண்டனில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்திய நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு  ஆளும் கட்சி மதிப்பளிப்பதில்லை” என்று கூறியிருந்ததற்கு, மோச மாக விமர்சித்துள்ளார். “’வெளிநாட்டுப் பெண் ணுக்கு பிறந்த மகன் ஒரு போதும் தேசபக்தனாக இருக்க முடியாது’  என்று சாணக்யா கூறியிருந்தார். அவர் கூறியது உண்மை என்  பதை ராகுல் காந்தி நிரூபித்துள ளார். உங்கள் தாய் (சோனியா காந்தி) இத்தாலியை சேர்ந்தவர் என்பதால் நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல என்று நாங்கள் கருதினோம். வெளிநாட்டுக்கு  சென்று, நாடாளுமன்றத்தில் பேச  வாய்ப்பில்லை என்று சொல்கி றீர்கள், இதை விட வெட்கக் கேடானது வேறு எதுவும் இருக்க  முடியாது” என்று கூறியுள்ளார். மேலும், “ராகுல் காந்திக்கு அரசியலில் வாய்ப்பு அளிக்கக் கூடாது, நாட்டை விட்டே தூக்கி எறிய வேண்டும்” என்றும் ஆத்தி ரம் அடைந்துள்ளார்.