states

ஆசிரியர்களுக்கு இந்த மாத ஊதியம் காலதாமதமாக வாய்ப்பு

சென்னை, அக். 26- அரசு உதவிப்பெறும் பள்ளி  ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பள்ளி களில்  ஆசிரியர் அல்லாத ஊழியர்க ளுக்கு,  இந்த மாதம் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறக்கூடிய பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரு கின்றனர். அத்தகைய ஆசிரியர்கள்  மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்க ளுக்கான சம்பள பட்டியல் மாதந் தோறும் 20ஆம் தேதி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும். அதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட பின்  கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டு ஆசிரியர்களின் வங்கி கணக் கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில், ஏற்கனவே இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை 120இல் இருந்து 152ஆக உயர்ந்துள்ளது. ஆனால்,  பல மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்னும் முழுமையாக பொறுப் பேற்கவில்லை எனக் கூறப்படு கிறது. இதனால் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி  ஆசிரியர்களுக்கான ஊதியப்  பட்டியல் இதுவரை பெறப்பட வில்லை. இதனால் அரசு பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் ஊதி யம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. பணி மாறுதல் பெற்ற ஆசிரியர் கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத  ஊழியர்கள், புதிய இடங்களில் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக் கான நிதி பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததால், இந்த மாதத் திற்கான ஊதியம் கிடைப்பதில் மட்டும் தாமதம் ஏற்படலாம் என  கல்வித்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.