சென்னை,மே 4- தமிழ்நாடு சட்டப்பேர வையில் இந்து சமய அற நிலையத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் பண்டி கைகளுக்கு வாழ்த்து சொல் வது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித் தார். அதேபோல் எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி யும் சில கருத்துக்களை கூறி னார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,“ திமுக கூட்டணி யில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று இணைந்துள்ளன. நாங்கள் அனைவரும் மதச்சார்பற்றவர்கள்தான். திமுக ஆன்மீகத்துக்கு எதிராக இருப்பது போல சிலர் திட்டமிட்டு பரப்பி வரு கிறார்கள். அதை பேரவை யிலும் பதிவு செய்ய அதிமுக உறுப்பினர் முயற்சி செய் துள்ளார். இது தந்தை பெரி யார் ஆட்சி, சி.கருணாநிதி வழி நடத்திய ஆட்சி, மொத் தமாக சொல்ல வேண்டும் என்றால் இது பெரியாரின் திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் ஒருபோதும் அடிபணியாது” என்றார்.