சென்னை, ஜன.4- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோ வன் மகனுமான ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ஈரோடு கிழக்கு சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். அமைதியோடும் பொறுப்புணர் வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் ஈ.வெ.ரா. திருமகன். ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரை யேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது. ஈ.வெ.ரா. திருமகன் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும் பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஈ.வெ.கி. சம்பத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின் அரசியல் பாதையைப் பின்பற்றி, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறப் பாக பணியாற்றியவர். சமூக ஊடகத் துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை பரப்பியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள செய்தியில் , காங்கிரஸ் கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றியதோடு, அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளைச் செய்து வந்தார். வாழ வேண்டிய 46 வயதிலேயே அவர் இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
46 வயதே ஆன திருமகன் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது என்று குறிப்பிட் டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச இளங் கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
கி.வீரமணி
துடிப்புமிக்க இளைஞரான திரு மகன் அரசியல் உலகில் ஜொலிக்கக் கூடியவர் என்ற எதிர்பார்ப்போடு இருந்தோம். இந்த மரணம் ஈடு செய் யப்படவே முடியாதது. பெருந் துயரத் திற்கு ஆளாகியுள்ள ஈ.வெ.கி.ச. இளங்கோவன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முத்தரசன்
திருமகன் ஈவெரா இறந்து போனார் என்ற செய்தியை எளிதில் ஏற்க முடிய வில்லை என்று குறிப்பிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் முத்தரசன், அவரது மறைவால் எதிர்காலம் பண்புமிக்க தலைவர் ஒரு வரை இழந்து நிற்கிறது. அவரை இழந்து நிற்கும் ஈவெகிச இளங்கோ வன், அவரது இணையர் வரலட்சுமி ஆகியோரை காலம்தான் தேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.