சென்னை, ஜூன் 20 - ஆர்எஸ்எஸ்க்கு ஆள் சேர்ப்பதற்காக ‘அக்னி பாதை’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிரு ஷ்ணன் குற்றம்சாட்டி யுள்ளார். ராணுவ வீரர்களை ஒப்பந்த முறையில் நியமிக்க ஒன்றியஅரசு ‘அக்னிபாதை’ திட்டத்தை அறிவித்துள் ளது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் திங்க ளன்று (ஜூன் 20) சைதாப் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதா வது: ‘அக்னிபாதை’ திட்டத்தை எதிர்க்கட்சி களும், இளைஞர்களும் ஏற்கவில்லை. நல்லெண் ணத்தில் அறிவிக்கும் திட்டங்களை அரசியலாக் கப்படுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். நல்லெண்ணத் தோடு நரகத்திற்கு சாலை அமைத்துள்ளேன் என்று சொன்னால் ஏற்க முடியுமா?
ஒப்பந்தமுறையில் ஆள் சேர்ப்பது ராணுவத்திற்கும், இளைஞர்களின் எதிர் காலத்திற்கும் நல்லதல்ல. தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 6 லட்சம் பேர் உடற்தகுதி, மருத்துவசோதனை முடித்து ராணுவத்தில் சேர தயாராக உள்ளனர். இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். தேசத்தின் பாதுகாப்போடு அரசு விளையாடுகிறது. ராணுவத்தை சீரழிக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது. 4 ஆண்டு பயிற்சி கொடுத்து, ஆர்எஸ்எஸ்க்கு ஆள் சேர்ப்பதற்காக ‘அக்னிபாதை’ திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இத்திட்டத்தை இளைஞர் கள் நிராகரித்துள்ளனர். எதிர்க் கட்சிகளின் கோரிக் கையை ஏற்று அரசு இத்திட்ட த்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், சைதாப் பேட்டை பகுதிக்குழு உறுப்பினர் ஜெ.ஜூலியட் உள்ளிட்டோர் பேசினர்.