states

img

அழியும் ஆபத்தில் உலகின் மிகப்பெரிய பூ - சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகின் மிகப்பெரிய துர்நாற்றம் வீசும் பூ அழியும் ஆபத்தில் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரஃப்லீசியா (Rafflesia) என்ற குடும்பத்தைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய பூ பூக்கும் இந்த தாவரங்களின் 42 இனங்களும் வன வாழிட இழப்பால் அழியும் ஆபத்தில் உள்ளன. இந்த ஒட்டுண்ணி தாவரம் அழுகும் இறைச்சியின் மணத்தை கொண்டது. கார்ப்ஸ் பூ (Corpse flower) என்றும் அழைக்கப்படும் இத்தாவரம் பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்துவருகிறது.

அழகிய மர்மப் பூ
 

இப்போது இத்தாவரம் முழுவதுமாக அழியும்  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இதை தடுக்க உட னடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி யுள்ளனர். பூக்கும் காலத்தில் அழகாகத் தோற்ற மளிக்கும் இத்தாவரம் இறைச்சி உண்ணும் ஈக் களைப் பிடிப்பதற்காக வெளியிடும் அழுகும் மாமிசத்தின் மணம் உலகப் புகழ்பெற்றது. இந்த இனத்தைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய பூ பூக்கும் தாவரவகை பூக்கள் ஒரு மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு உடையது. பாதுகாப்பில்லாமல்  வாழும் அபூர்வ தாவரம் தென் கிழக்கு ஆசியாவில் வாழும் இவற்றின் இனங்கள் அனைத்துமே அழியும் நிலையில் உள்  ளன. இவற்றில் 25 இனங்கள் அழிவின் விளிம்பில்  (CR) உள்ளன. 15 இனங்கள் அழியும் ஆபத்தில்  (EN) உள்ளன. இவற்றின் மூன்றில் இரண்டு பகுதி  தாவரங்களும் எந்த பாதுகாப்பு திட்டத்திலும்  உட்படுத்தப்படவில்லை என்று சமீபத்தில் தாவரங்கள்-மக்கள்-கோள் (journal Plants, People, Planet) என்ற ஆய்விதழில் வெளியிடப் பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறு கிறது. இவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய உலகளாவிய முதல் ஆய்வு இது.

உரிய முக்கியத்துவம்

இக்குடும்பத்தைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய பூக்கும் மற்றொரு வகை ரஃப்லீசியா ஆர்னோல்டிஐ (Rafflesia arnoldii) தாவரம் சுமத்ராவில் உள்ளது. எவ்வளவு புகழ்பெற்றவையாக இருந்தாலும் தாவரங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அழியும் ஆபத்தில் இருக்கும் விலங்குகளுக்குக் கொடுக்  கப்படும் அதே முக்கியத்துவம் தாவரங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று ஆக்ஸ்போர்டு தாவரவியல் பூங்காவின் ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான டாக்டர் க்றிஸ் தோரகுட் (Dr Chris Thorogood) கூறுகிறார். மறைந்திருக்கும் வாழ்க்கை ரகசியங்கள் இந்த தாவரத்தின் பெரும்பகுதி வாழ்க்கை முறையும் வெளிப்படையாக நடப்பதில்லை என்ப தால் இந்த பூக்கள் பற்றி இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. இந்நிலையில் இதன் புதிய இனங்கள் தொடர்ந்தும் கண்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் இதில் இப்போது பூமி யில் பல இனங்களிலும் ஒவ்வொரு குடும்பத்திலும்  ஒரு சில நூறு தனிப்பட்ட தாவரங்கள் மட்டுமே உள்ளன. அறிவியல் உலகம் அறியும் முன்பே பல இனங்களும் கவலைதரும் வகையில் அழிக்கப்படுகின்றன என்று சமீபத்திய ஆய்வு கள் சுட்டிக்காட்டுகின்றன.

வேரும் தண்டும் இலையும்  இல்லாத தாவரம்

ஒட்டுண்ணியாக வாழும் ரஃப்லீசியா தாவரத் திற்கு வேர், தண்டு, இலைகள் இல்லை. இவை ஒளிச்சேர்க்கை செய்வதில்லை. பதிலுக்கு இவை பூஞ்சை செல்கள் போல காணப்படும் குழல்  களைப் பயன்படுத்தி புரூனைன், இந்தோனே ஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்  லாந்தின் வெப்பமண்டல காடுகளில் படர்ந்தி ருக்கும் மது போன்ற திரவத்தில் இருந்து உணவை யும் நீரையும் பிரித்தெடுக்கின்றன.

பிரம்மாண்ட பூவாக மாறும்  சிறிய மொட்டு

இத்தாவரத்தின் பெரும்பகுதியும் இந்த திர வத்தால் நிரம்பி காணப்படுகிறது. முட்டைக்கோஸ் போன்ற சிறிய மொட்டுகளை உருவாக்குகிறது. இதுவே பிறகு வளர்ந்து பிரம்மாண்டமான ரப்பர்  போன்ற இழுதன்மையுடைய பூவாக மாறுகிறது. ஒட்டுத்தன்மையுடைய கெட்டியான திரவம் மூலம்  மகரந்தசேர்க்கை செய்கிறது. இந்த திரவம் ஈ போன்ற பூச்சிகளின் உடல் மீது பசை போல ஒட்டிக்கொள்கிறது. புகழ்பெறத் தொடங்கிய பின் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பி யர்கள் இந்த தாவரத்தை கண்டுபிடித்த பிறகு  இதன் பூவை பார்ப்பது மற்றும் சேகரிப்பதே பல  ஆய்வுப்பயணங்களின் முக்கிய நோக்கமாக அமைந்தது. இந்த தாவரம் காட்டில் இருக்கும்  மது போன்ற திரவத்துடன் (wine) தொடர்புகொள்  கிறது, சேகரிக்கிறது என்பது பல விஞ்ஞானி களுக்கும் இன்றும் வியப்பாகவே உள்ளது.

அதிசய வடிவப் பூக்கள்

மிகப்பெரிய அளவிலான கிண்ணம் போன்ற அமைப்புடன் லேசான பழுப்பு நிறமுடைய ரஃப்லீசியா பென்க்யூலூயென்சிஸ் பூக்களும் (Rafflesia bengkuluensis) சுமத்ராவின் உட்பகுதிகளில் காணப்படுகின்றன. பந்நாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தால் ரஃப்லீ சியா மேக்னிப்பிகா (Rafflesia magnifica) என்ற  ஒரே ஒரு இனம் மட்டுமே அழியும் ஆபத்தில் உள்ள தாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆய்வா ளர்கள் இந்த இனத்தின் எல்லா வகைகளையும் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று கோரியுள்ளனர்.

சூழல் சுற்றுலா

இத்தாவரங்களின் வாழிடப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இருக்கும் இதுபோன்ற அபூர்வ தாவரங்கள் முற்றி லும் அழியும் முன்பு அவை பற்றிய ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட்டு அறியப்படவேண்டும். இவற்றின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். தாவரவியல் பூங்காக் களில் இதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெரிய வெற்றியைத் தரவில்லை. சூழலிற்கு நட்பு டைய சுற்றுலா ஊக்குவிக்கப்படவேண்டும்.

காடு காக்கும் ஆதிவாசிகள்

அப்போது ரஃப்லீசியா காணப்படும் பகுதியில்  வாழும் மக்கள் பயனடைவர். இந்த இனங்களும் அழியாமல் காக்கப்படும். ஆதிவாசி மக்களே பல வனச்செல்வங்களின் சிறந்த பாதுகாவலர்கள். ரஃப்லீசியா தாவரம் ஆதிவாசிகளின் உதவி யில்லாமல் காப்பாற்றப்படமுடியாது என்று பிலிப்பைன்ஸ் வன அதிகாரி ஆட்ரியன் தோ பையஸ் (Adriane Tobias)கூறுகிறார். ஆய்வா ளர்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் மக்கள் மனது வைத்தால் நாளை ஆசிய வெப்பமண்டலக் காடு களைக் காக்க உதவும் ஒரு அடையாளச்சின்னமாக ரஃப்லீசியா மாறும் என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.