டெல் அவிவ்,நவ.19- பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் குழு வினர் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்தனர். இந்த தாக்குதலின் போது பல இஸ்ரேலியர்க ளின் உயிரைப் பறித்தது இஸ்ரேல் ராணுவம் தான் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அக்டோபர் 7 அன்று காசா எல்லைப் பகுதி அருகே, இஸ்ரேலைச் சேர்ந்த வர்கள் பங்கேற்றிருந்த நோவா இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. ஹமாஸ் குழுவினரின் தாக்குதலால் இந்நிகழ்ச்சி யில் இருந்த பலரும் பலியானார்கள் என்று இஸ்ரேல் ராணுவம் கூறி வந்தது. அதற்கு பழிவாங்குவதற்காகத் தான் காசா மீது போர் அறிவிப்பு செய்து மிக கொடூரமாக இனப்படு கொலை செய்து வருகிறது. இதுவரை 5,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 12,300 க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது இஸ்ரேல ராணுவம். இந்நிலையில் நோவா இசை நிகழ்ச்சியில் இஸ்ரேலியர்கள் பலரின் உயிரைப் பறித்தது இஸ்ரேல் ராணு வமே என அந்நாட்டு காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நவம்பர் 18 அன்று ‘ஹாரெட்ஸ்’ என்ற இஸ்ரேலிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘தற்காப்பு தாக்குதல்’ என்ற பெய ரில் இஸ்ரேல் ராணுவம் ஹெலிகாப்டர் மூலம், ஹமாஸ் குழுவை தாக்குவதாக பயந்து ஓடிய இஸ்ரேலியர்களின் மீதும் அவர்களின் வாகனங்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காணொலி சில நாட்களுக்கு முன் வெளியானது.
ஹமாஸ் குழுவின் திட்டமிட்ட தாக்குதலில் இசை நிகழ்ச்சியில் இருந்த 364 பேர் கொல்லப்பட்டதாகவும், ரமாத் டேவிட் தளத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த இஸ்ரேலிய போர் ஹெலிகாப்டர், ஹமாஸ் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மட்டுமே இஸ்ரேல் கூறி வந்த நிலை யில், இஸ்ரேலியர்கள் பலரும் இஸ்ரேல் ராணுவத்தாலேயே கொல்லப் பட்டதாக முதல் முறையாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் காசா எல்லைக்கு அருகிலுள்ள பீரி எனும் இடத்தில் இஸ்ரேல் மக்களையே கொன்றதாக ஊடகங்கள் தெரிவித்துள் ளன. இதேவேளையில், ஹமாஸ் குழு வினர் இஸ்ரேலியர் சிலரை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர்.இந்த இடங்களுக்கு வந்த இஸ்ரேல் ராணுவம் பணயக்கைதிகளின் உயிருக்கு முக்கியத்துவம் தராமல் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தியும் டாங்கிகள் மூலம் குண்டு மழை பொழிந்தும் இஸ் ரேல் பணயக் கைதிகள் மற்றும் ஹமாஸ் குழுவினரை கொன்றுகுவித்தது. 12 வயதான லீல் ஹெஸ்ரோனி, அந்த குழந்தையின் சகோதரர் யானாய் மற்றும் அவர்களது அத்தை அய்லா ஆகியோர் பீரி பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இடிந்து விழுந்த வீட்டி லிருந்து அந்த குழந்தையின் உடலை மீட்க முடிய வில்லை என்றும் கூறப் பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதலின் ஒரு பகுதியாக ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலின் ஸ்டெரோட்டில் ஒரு காவல் நிலையத்தைக் கைப்பற்றி இஸ்ரேலிய காவல்துறையினரை சிறை பிடித்து வைத்திருந்தனர்.அங்கும் இஸ்ரேல் ராணு வம் டாங்கிகள் மூலம் சுட்டு மொத்த காவல் நிலை யத்தையும் தகர்த்து தமது சக காவலர்களை, ஹமாஸ் குழுவினரோடு படுகொலை செய்தனர். பின்னர் இஸ்ரேல் ராணுவம் அந்த காவல் நிலையத்தை புல்டோசர் மூலம் தரை மட்டமாக்கியது. இந்நிலையில் அக்டோ பர் 7 அன்று நடத்த மோத லில் எத்தனை பேர் ஹமா ஸால் கொல்லப்பட்டார்கள்; எத்தனை பேர் இஸ்ரே லியப் படைகளால் கொல்ல ப்பட்டார்கள் என்பது தெளி வாகத் தெரியவில்லை. இஸ்ரேல் ராணுவத்தி னர், காவலர்கள் மற்றும் இஸ்ரேல் பொது மக்கள் உட்பட 1,400 பேரை ஹமாஸ் குழுவினர் தாக்கு தலில் கொன்றதாக கூறி வந்த இஸ்ரேல் ராணுவம் பின்னர் இந்த எண்ணிக்கை யை 1,200 ஆக மாற்றிக் கொண்டது. மற்ற 200 பேரின் உடல்கள் மோசமாக எரிக்கப்பட்டிருந்ததால் அவர்களை இஸ்ரேலி யர்கள் என நினைத்ததா கவும் பிறகு அவர்கள் ஹமாஸ் குழுவினராகவோ அல்லது பாலஸ்தீனர்களா கவோ இருக்கலாம் எனக் கருதியதாகவும் இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் தெரிவித்தார்.