states

காவிரியில் 37.97 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்!

புதுதில்லி, ஆக. 14 - காவிரியில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 37.97 டிஎம்சி தண்ணீரை உடனடியாக விடு விக்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு திங்களன்று உச்ச நீதிமன்றத்திடம் முறை யிட்டுள்ளது. 113 பக்கங்களைக் கொண்ட அந்த விரிவான முறையீட்டு மனுவில், “காவிரியில் தமிழ்நாட்டிற்கான தண்ணீரை கர்நாடகா முழுமையாக திறந்து விடவில்லை. காவிரி ஆணையமும் இதற்கான உத்தரவைப் பிறப் பிக்காததால், காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய எஞ்சிய 37.9 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை (ஆக. 10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை 15 நாள்களுக்கு விடுவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.  ஆனால், வெள்ளிக்கிழமை (ஆக. 11) நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இதுகுறித்து 3 மணி  நேரத்துக்கு மேல் விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்குத் தேவையான காவிரி நீர் அளவு குறித்து வலியுறுத்தப்பட்டது.

ஆனால், கர்நாடக அரசுத் தரப்பு அதிகாரிகள் 15 ஆயிரம் கன அடிக்குப் பதிலாக 8 ஆயிரம் கன அடி மட்டும்தான் தண்ணீர் திறக்கப்படும் என்றும், அதுவும் ஆகஸ்ட் 22 வரையில் மட்டுமே அளிக்கப் படும் என்றும் தெரிவித்தனர். மறுபுறத்தில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமோ, தமிழகத்துக்கு வர வேண்டிய 37.97 டிஎம்சி நீர் பற்றாக்குறையை வழங்குமாறு கர்நாடகம் அரசுக்கு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காமல் தமிழ்நாட்டை ஏமாற்றும் வகையில் நடந்து கொண்டது. இதையடுத்து, அந்தக் கூட்டத்திலிருந்து தமிழக நீர்வளத்து றை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இந்நிலையிலேயே, தற்போது கருகும் பயிர்களைக் காப்பாற்ற, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. “காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீ ரையும் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே மேகதாது விவகாரம் தொடர் பான மனு, உச்ச நீதிமன்றத்தில் நீண்டகால மாக விசாரணைக்கு வராமல் இருக்கிற நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவை விரைந்து விசாரிக்க கோரி, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு முறையீட்டை முன்வைக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.